Monday, February 8, 2010

விஷ்ணு புராணம் - 78

04_22. இதேபோல் ஸூர்ய வம்சத்தில் ப்ருஹத்பலனென்பவன் பாரத யுத்தத்தில் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான் என்று முன்பு கூறப்பட்டது. அவனுக்குப் பின் வம்சம், ப்ருஹத்பலன், ப்ருஹத்க்ஷணன், உருக்ஷயன், வத்ஸவ்யூஹன், ப்ரதிவ்யோமன், திவாகரன், ஸஹதேவன், ப்ருஹதச்வன், பானுரதன், ப்ரதீதாச்வன், ஸுப்ரதீகன், மருதேவன், ஸுநக்ஷத்ரன், கின்னரன், அந்தரிக்ஷன், ஸுபர்ணன், அமித்ரஜித், ப்ருஹத்பாஜன், தர்மீ, க்ருதஞ்ஜயன்,ரணஞ்ஜயன், ஸஞ்ஜயன், சாக்யன், சுத்தோதனன், ராஹுலன், ப்ரஸேனஜித், க்ஷுத்ரகன், குண்டகன், ஸுரதன், ஸுமித்ரன் என வளரப் போகிறது.இந்த ஸுமித்ரனுடன் இக்ஷ்வாஹுவின் வம்சம் இந்தக் கலியுகத்தில் முடியப் போகிறது.

No comments:

Post a Comment