Monday, September 9, 2019

பாவயாமி ரகுராமம் தமிழ்ப் பொருளுடன்

பாவயாமி ரகுராமம்
ராகம்: சாவேரி ( ராகமாலிகா )
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: சுவாதி திருநாள்

முழு ராமாயணம் சிறிய ஸம்ஸ்க்ருத பாடல் வடிவில், புரிந்து பாட தமிழில் பொருளுடன்

- தினசரி பூஜை, பயணத்தின் போதும், தீட்டு அது, இதுன்னு ப்ரச்சினை இல்லாமல் எப்போதும் பாட, த்யானிக்க உகந்தது
- குழந்தைகளுக்கும், பொது இடங்களிலும் கதை சொல்ல ஒரு கையேடு போலவும் பயன்படுகிறது.
- பல ராகங்களில் இதன் பகுதிகளை மாலையாக தொடுத்துப் பழகவும் எளிதாக, கேட்க இனிமையான எம்.எஸ். சுப்புலட்சுமி,  ஸ்ரீ செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயர் குரல்களில்  https://www.youtube.com/watch?v=P8S4Z9Khg-w

https://www.youtube.com/watch?v=oRXGs3Y0ZXQ

பல்லவி (சாவேரி)
भावयामि रघुरामम् भव्य सुगुणारामम् ।
பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |
பொருள்:
ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

அனுபல்லவி
भावुक वितरण परापाङ्ग लीला लसितम् ।।
பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||
பொருள்:
ஒளிரும் தன் கடைக்கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

ஸரிகஸரி, மபதபத, | ரிஸநிதநிதபமகரிஸத.|
ஸரிம, கரிமபத, பமபதஸ, நிதநிதபமபத|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 1 (நாட்டைகுறிஞ்சி)
दिनकरान्वय तिलकं दिव्य गाधिसुत सवना-
वन रचित सुबाहु मुख वधम् अहल्या पावनम् ।
अनघमीश चापभङगं जनक सुता प्राणेशं
घन कुपित भृगुराम गर्व हरमित साकेतम् ॥
தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்
பொருள்: சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

மகஸ, நி.த.நி.ஸ,ரிகம | நிதம, கரிகமபகரிஸ|
நி.த.நி.ஸரிகமநிதநிபதநிஸநிதநிஸரிகமகசநி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 2 (தன்யாசி)
विहिताभिषेकम् अथ विपिन गतम् आर्य वाचा
सहित सीता सौमित्रीं शान्ततम शीलम् ।
गुह निलय गतं चित्रकूटागत भरत दत्त-
महित रत्नमय पादुकं मदन सुन्दराङ्गम् ॥
விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்
பொருள்:
பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

நி.ஸக,மபகமப, நிஸ | ரிஸரிநிஸபதபக, ரிஸ|
நிஸகமபக, மபநிஸப, நிஸகரிஸநிதபநிஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 3 (மோஹனம்)
वितत दण्डकारण्य गत विराध दलनं
सुचरित घटज दत्तानुपमित वैष्णवास्त्रम् ।
पतगवर जटायु नुतं पञ्चवटी विहितावासं
अति घोर शूर्पणखा वचनागत खरादि हरम् ॥
விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்
பொருள்:
அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

க, , பகரிகரிஸத.ஸரி| க, , பதஸதபகரிஸரி
கபககரிஸரிகரிரிஸதஸரிகரிகபகபதபதஸ|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 4 (முகாரி)
कनक मृग रूप धर खल मारीच हरमिह
सुजन विमत दशास्य हृत जनकजान्वेषणम् ।
अनघम् पम्पातीर संगताञ्जनेय नभोमणि
तनुज सख्यकरं वाली तनु दलनमीशम् ॥
கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்
பொருள்:
பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

ப, , மகரிஸ,நி.த.ஸரி| ம, , கரிஸரிமபமநித|
ஸ, ஸநிதபப, மகரிஸநி.த.ஸரிமபநிதமபதஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 5 (பூர்வி கல்யாணி)
वानरोत्तम सहित वायुसूनु करार्पित
भानुशत भास्वर भव्य रत्नाङ्गुलीयम् ।
तेन पुनरानीतान्यून चूडामणी दर्शनं
श्रीनिधिमुदधि तीरेश्रित विभीषण मिलितम् ॥
வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்
பொருள்:
ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

க, மகரிஸத.ஸ,ரிகம| ப, ,தபஸநிதபமகரி|
கமபம, பக,, மரி, கஸ, ரிக, மபதபஸ, நி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 6 (மத்யமாவதி)
कलित वर सेतुबन्धं खल निस्सीम पिशिताशन
दलनम् उरु दश कण्ठ विदारणम् अति  धीरम् ।
ज्वलन पूत जनक सुता सहितम् यात साकेतं
विलसित पट्टाभिषेकं विश्व पालं पद्मनाभम् ॥
கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்
பொருள்:
சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

ரி, மரிமபநி, பமபநி| ஸ, , நிஸநிபபமமரிஸ|

ராகம்1: ரிபமரிஸநி. ஸரிமப
ராகம்2: தபஸ, நிதபமகமகரி
ராகம்3: ஸ, நி. த.. ஸரிமக ரிஸரி
ராகம்4: க, தபகரிஸரிகபதஸ
ராகம்5: ரிஸத, பதபக, ரிஸ
ராகம்6: நி. ஸமகமநிதநிபதநிஸ
ராகம்0: கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத|

(பாவயாமி ரகுராமம்)

No comments:

Post a Comment