Thursday, November 7, 2019

முழு ராமாயணம் எளிதில் மனம் கொள்ள தமிழ் வரிகளுடன், குழந்தைகள் உயிர் நடிப்புடன்

முழு ராமாயணம் எளிதில் மனம் கொள்ள தமிழ் வரிகளுடன், குழந்தைகள் உயிர் நடிப்புடன்

திரைப்படம்: லவகுசா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, பி. லீலா
ஆண்டு: 1963
வீடியோ: https://youtu.be/8wgvpuiRrAM

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே (ஜகம்)

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும் (ஜகம்)

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தை தனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வ வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான் (ஜகம்)

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்காண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமதைக் கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தை உனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்

சஞ்சலமில்லாமல் அஞ்சன வண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுரி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
உடனென போவதென தடுத்தனர் சென்று

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே (ஜகம்)

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐயன் வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாயதாக்ஷம்

ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

Tuesday, October 8, 2019

ப்ரஹ்ம புராணக் குறிப்புகள்

ப்ரஹ்ம புராணம்
- ஆதி புராணம்
- 246 அதிகாரங்களையும், 14,000 பாடல்களையும் கொண்டது
- 12 ஆண்டுகள் நைமிசாரண்யத்தில் நடந்த யாகத்தில் ரோமஹர்ஷணர் கூறியது.
- புராண லக்ஷணங்கள்: அண்டங்கள், படைப்பும் ஒடுக்கமும், மன்வந்த்ரங்கள், ஸூர்ய சந்த்ர வம்ச வர்ணனை, அரச பரம்பரைகள்
- ப்ரஹ்மா தக்ஷனுக்குக் கூறியது

குறிப்புகள்:
- தக்ஷன் ப்ரஹ்மாவின் புத்ரன் அல்ல !!
- பல்லுயிர்கள், தேவர், அசுரர் படைப்பு விதம்
- குமரன் தோற்றம்
- படைப்புகளின் அதிபதிகள்
- இக்ஷ்வாஹு பரம்பரை பெயர்க் காரணங்கள்
- தமிழ் மன்னர் பரம்பரை குறிப்புகள்
- கோனார்க் கோவிலும், பன்னிரெண்டு ஆதித்யர்களும், அஷ்டோத்ரமும்
- பூரி ஜகன்னாதர், புவனேஶ்வர் வரலாறு
- கௌதம கங்கை பிறப்பும், சிறப்பும்
- ததீசி முனிவரும், வஜ்ராயுதமும்
- மணிகுண்டலனும், விபீஷணனும்
- யோகம், காயத்ரீ மஹிமை
எங்கும் நீர் சூழ்ந்திருந்த உலகில் நாராயணன் சயனித்திருக்க, அந்த நீரிலிருந்து வெளியே வந்த பொன்னிற முட்டையின் இரு பகுதிகளாக ஆகாயம், பூமியையும், அவைகளில் திசைகள், மொழிகள், உணர்வுகள், காலங்களை ஸ்வயம்புவான நான் உண்டாக்கினேன்.  மனதால் ஸப்த ரிஷிகளையும், ருத்ரன், சனகாதியர்களையும் படைத்தேன்,  ஸ்வாயம்புவ மனு-ஶதரூபையிடம் வீரன், ப்ரியவ்ரதன், உத்தானபாதனை உண்டாக்கினேன்.   உத்தானபாதன் மகன் த்ருவன், அவன் பரம்பரையில் வந்த ப்ராசீனபர்ஹிக்கு ப்ரசேதனர்கள் எனும் பத்து பேர் பிறந்தனர்.  அவர்கள் தவத்தில் நாட்டம் கொண்டு ராஜ்யத்தை விட்டதால் எங்கும் காடாய் பெருகியது.    அவர்கள் கோபம் கொண்டு வாயு, அக்னியை தோற்றுவித்து காட்டை அழிக்கலாயினர்.  இதைத்தடுத்து சந்த்ரன் மரீஷை என்ற பெண்ணை அவர்களுக்கு மணம் முடித்து, அவள் மூலம் அரசாள ஒருவனை உண்டாக்குமாறு கூற, அப்படியே அவர்கள் தக்ஷனை உண்டு பண்ணினர்.  (தக்ஷ ப்ரஜாபதி ப்ரஹ்மன் கால் கட்டை விரலிலிருந்து தோன்றினான் என்பது வேறொரு சதுர்யுகத்தில்).

தக்ஷன் ஆட்சியில் தான் உண்டுபண்ணின ஆயிரக்கணக்கானவர்களையும் ஒவ்வொரு முறையும் நாரதர் தவம் செய்ய அனுப்பி விட, தக்ஷன் 60 பெண்களை படைத்து, 27 பெண்களை சோமனுக்கும், பத்துப் பெண்களை தர்ம தேவதைக்கும், 13 பேர்களை கஶ்யபருக்கும், எஞ்சிய பெண்களை அரிஷ்டநேமி, ஆங்கீரசா முதலிய முனிவர்களுக்கும் ,  ப்ரியா என்பவளை பிரம்மனுக்கும் மணம் முடித்தான்.  தர்ம தேவதையை மணந்த பத்துப் பெண்களுள் அருந்ததிக்கு 'உலகத்திலுள்ள பொருள்கள்’எனும் குழந்தைகளும், வசுவிற்கு அஷ்டவசுக்களும் பிறந்தன. அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய அனலன் என்பவனுக்குக் குமரன் பிறந்தான்.   கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையின் அவன் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றான். அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய பிரபசாவுக்கு விஸ்வகர்மா பிள்ளையாகப் பிறந்தான்.    சாத்யாவின் மக்கள் சாத்ய தேவர்கள், விஶ்வாவின் மக்கள் விஶ்வேதேவர்கள்,   அதிதிக்கு 12 ஆதித்தர்களும், திதிக்கு ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் முதலிய அரக்கர்களும், அவர்கள் சகோதரியாகிய சிம்ஹிகாவிற்கு வாதாபி, வில்வலன், மாரீசன் முதலிய அரக்கர்களும் தோன்றினர்.  தானவர் வம்சத்தில் பௌலமர், காலகேயர்கள் தோன்றினர், அரிஷ்டாவிற்கு(அர்ஷிதா) கந்தர்வர்களும், காசாவிற்கு யக்ஷர்களும், சுரபிக்கு பசுக்களும், எருமைகளும்,  வினதைக்கு அருணனும், கருடனும்,  தாம்ராவின் ஆறு பெண்களிடம் ஆந்தை, கழுகு, ராஜாளி, காக்கை, நீர்ப்பறவைகள், குதிரை, ஒட்டகங்கள், கழுதைகளும், க்ரோதவசைக்கு நாகர்களும், இளையிடம் கொடி, புதர், மரங்களும், கத்ருவுக்கு அனந்தன், வாசுகி, தக்ஷன், நஹுஷன் போன்ற நாகர்களும், முனிக்கு அப்ஸரஸ்ஸுகளும் தோன்றினர்.  

திதி தேவர்களை வெல்ல ஒரு பிள்ளை வேண்டி வ்ரதமிருக்கையில் விரதபங்கமான சமயத்தில் இந்த்ரன் அணுவாய் நுழைந்து அந்த கருவை 7 துண்டுகளாகவும், மீண்டும் 49 துண்டுகளாகவும் சேதித்து விட அவர்கள் ஸப்த மருத்துக்களாக அவனுக்கு நண்பனாகவே பிறந்து போனார்கள்.  

துருவன் பரம்பரையில் வந்து நேர்மையாக அரசாண்டவன் அங்கன். அவன் மனைவியாகிய சுனிதா மிருத்யுவின் மகளாவாள். அவள் மகனான வேனன் மிருத்யுவுடன் சேர்ந்து கொண்டு எல்லையற்ற அகங்காரம் கொண்டவனாக திரிந்தான்.  அத்ரி முனிவர் வேனன் வலக்காலைக் கடைந்து. மிகக் குரூரமானதும், கொடியதும், பயங்கர மானதும், கரியதுமான குள்ளன் ஒருவனை வெளிக்கொணர்ந்தார்.  நிஷிதர்(உட்கார்) என்று அவனை அத்ரி கூறினார்.   துஷாரர்கள், துண்டுரர்கள், நிஷாதர்கள் இவன் வழி வந்தவர்கள்.  மீண்டும் வேனன் கையை கடைந்தபோது ஒளி வடிவுடன் சிறந்த கவசம் பூண்டு ப்ருது வெளிப்பட்டான்.  வேனன் இறந்து விட்டான்.  அவனை பூமிக்கு அரசனாக்கிய ப்ரஹ்மா, அவனுக்கு உதவி புரிய மரம், செடி, கொடிகள், விண்மீன்கள், கோள்கள், யாகங்கள், தியானம், வேதியர்களுக்கு சோமனையும், வருணனை கடலுக்கும், குபேரனை செல்வத்திற்கும் அரக்கர்களுக்கும். பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கும் விஷ்ணுவையும், அஷ்ட வசுக்களுக்கு அக்னியையும், பிரஜாபதிகளுக்கு  தக்ஷனையும், 49 மருத்துக்களுக்கும்  இந்திரனையும், தைத்திரியர்கள், தானவர்கள்களுக்கு பிரஹலாதனையும், பிதுர்க்களுக்கு யமனையும், யட்சர்கள், ராட்சதர்கள், பிசாசுகளுக்கு  ருத்ரனையும், மலைகளுக்கு  இமவானையும், நதிகளுக்குக் கடலையும், பாம்புகளுக்கு வாசுகியையும், கந்தர்வர்களுக்கு சித்ரரதனையும், பறவைகளுக்குக் கருடனையும், யானைகளுக்கு ஐராவதத்தையும் தலைவர்களாக நியமித்தார்.  நான்கு திசைகளுக்கும் நான்கு தலைவர்களை நியமித்தார்.

ப்ருதுவின் ஆட்சியை புகழ்ந்து பாட முனிவர்கள் யாக வேள்வியில் சூதர், மாகதர்களை தோற்றுவித்தனர்.  அவர்களால் ப்ருதுவின் புகழை அறிந்து வறட்சியில் இருந்த மக்கள் அவனிடம் முறையிட அவன் கோபம் கொண்டு பூமி தேவியை மிரட்ட, பசுவின் உருவில் இருந்த அவள் மிரண்டு மலைகளை சமவெளிகளாக்கி நீரைப் பாய்ச்சி வளம் கொழிக்க செய்து கொள்ளும் முறையை அவனுக்குக் கூற அவனும் அப்படியே செய்து நல்லாட்சி புரிந்தான்.  

மன்வந்த்ரங்கள்: இதுவரை சுவயம்புமனு முதல் ஆறு மனுக்கள் தோன்றி மறைந்துள்ளனர். இப்பொழுது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்திற்குத் தலைவன் 'வைவஸ்வத மனு.  நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு மகாயுகம்.  எழுபத்தோரு மகாயுகங்கள் ஒரு மன்வந்த்ரம்.   ஒவ்வொரு மன்வந்திரத்திலும் அதற்குரிய மனு, இந்திரன், தேவர்கள், முனிவர்கள் என்பவர்கள் மாறுவார்கள். இந்தக் கலியுகத்தில் அத்ரி, வசிஷ்டர், காசியபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர் மற்றும் ஜமதக்கினி ஸப்த ரிஷிகள்.   12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள், 2 அஶ்வினி தேவர்களே இந்த மன்வந்த்ரத்திற்கு தேவர்கள்.  பதினான்கு மன்வந்த்ரங்கள் கொண்டது ஒரு கல்பம்.

ஸூர்ய வம்சம்: ஆதித்யனுக்கு ஸம்ஞா, சாயா என்று இரு மனைவிகள்.  சம்ஞாவிற்கு வைவஸ்வத மனு, யமன், யமுனையும், சாயாவிற்கு சாவர்ணி மனுவும் தோன்றினார்கள்.  வைவஸ்வத மனு யாகப்பயனாக இக்ஷ்வாஹு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், வ்ருஷத்ரன் என்ற ஒன்பது மைந்தர்களையும், இளை எனும் பெண்ணையும் பெற்றான்.   இளைக்கும் சந்த்ரன் மகனான புதனுக்கும் புரூரவஸ் பிறந்தா, இளை ஸுத்யும்னன் எனும் ஆணாக மாறி விட்டான், அவனுக்கு உத்கலன், கயா, வினதஷ்வா எனும் புத்ரர்கள் பிறந்தனர்.  உத்கலன் கிழக்கையும், கயையை கயாவும், வினதஷ்வா மேற்கையும், இளையின் பூமியை புரூரவஸ்ஸும் ஆண்டனர், 

இக்ஷ்வாஹுவின் நூறு மகன்கள் மூத்தவன் விகுக்ஷி(சசகன்) யாக வேள்விக்கு கொண்டு வரவேண்டிய இறைச்சியை பசியால் உண்டுவிட, வஸிஷ்டர் ஆணைப்படி நாடு கடத்தப்பட்டு, இக்ஷ்வாஹுவுக்கு பின் வந்து அயோத்தியை ஆண்டான்.  (சசக - முயல் இறைச்சி).  விகுக்ஷியின் மகன் காகுஸ்தன்.  அந்த வம்சத்தில் வ்ரிஹதஷ்யன் மகன் குபலாஶ்வன்,  இவன் உதங்க முனிவன் வேண்டுதலில் தன் நூறு புத்ரர்களுடன் சென்று கடற்கரையில் தன் மூச்சுக்காற்றால் மணல் மேடுகளை உண்டாக்கி எல்லாரையும் ஹிம்சித்துக்கொண்டிருந்த துந்துபி எனும் அரக்கனை அழித்தான், த்ரிதஸ்வன், சந்த்ரஶ்வன், கபிலஶ்வன் என்ற புத்ரர்கள் தப்பினர்.  இதனால் இவன் துந்துமாறன் எனும் பெயரும் பெற்றான்.   துந்துமாறனுக்குப் பின் த்ரிதஸ்வனும் அவன் வழியில் த்ரையாருணியும் ஆண்டனர்.  த்ரையாருணி மகன் சத்யவ்ரதன் துஷ்டனானபடியால் வஸிஷ்டரால் காட்டுக்கு விரட்டப்பட்டான்.   த்ரையாருணி தவம் செய்ய வனம் புகுந்ததும் அரசனின்றி பஞ்சம் படர்ந்தது பன்னிரண்டு ஆண்டுகள்.  அப்போது விஶ்வாமித்ரர் காட்டில் தவத்தில் இருந்தார்.  நாட்டில் இருந்த அவர் மனைவி தன் மகனை கழுத்தில் கயிறு கட்டி (காலவன்) விற்க முற்பட்டபோது சத்யவ்ரதன் அவர்களை காத்து, பசித்த அவர்களுக்கு வஸிஷ்டரின் பசுவை கொன்று, தானும் உண்டு அவர்களுக்கும் தந்து காத்தான்.  வஸிஷ்டர் அவன் மீது தந்தை சொல் கேளாதது, பசு கடத்தல், பசு வதை என்று மூன்று குற்றங்களை சாட்டினார்.  அன்றிலிருந்து அவன் த்ரிசங்கு எனப்பட்டான்.  விஶ்வாமித்ரர் காட்டிலிருந்து வந்து அவனையே அரசனாக்கி ஆளச்செய்தார்.   அவனுக்கு ஸ்வர்க்கத்தையும் படைத்தார்.  

திரிசங்குவின் மகன் அரிச்சந்திரன். அவன் பரம்பரையில் வந்தவன் பாஹு, பகைவர்கள் படையெடுத்தபோது கர்ப்பிணி மனைவியோடு வனம் புகுந்த அவன் அங்கேயே இறந்தான்.  அவன் மனைவியைக் காத்து அவுர முனிவர் வளர்த்துவந்தார்.  அவள் சக்களத்தி கொடுத்த விஷத்தோடே பிறந்த குழந்தை சகரன்.   அவனை வளர்த்த முனிவர் அனுக்ரஹத்தாலும், உபதேசித்த ஆக்னேய அஸ்த்ரத்தாலும் அவன் கோனசர்ப்பர், மஹிஷகர், தார்வர், சோழ, கேரளர்களை வென்றான், வஸிஷ்டர் உத்தரவால் அவர்களை கொல்லாமல் விட்டான்.  சகரனுக்கு கேசினி, சுமதி என்று இரு மகன்கள்.  அவுர முனிவர் அருளால் கேசினிக்கு பஞ்ச ஜனனும், சுமதிக்கு நெய்க்குண்டத்தில் அறுபதினாயிரம் பிள்ளைகளும் பிறந்தனர்.  இவர்களில் வர்ஹிகேது, ஸுகேது, பஞ்சஜனன் ஆகியோர் தவிர ஏனையோர் தென் கடற்கரையில் கபிலர் பார்வையால் சாம்பலாயினர்,  பஞ்சஜனன் மகன் அம்ஶுமான், அவன் மகன் திலீபன். அவன் மகனாகிய பகீரதன். இவர்கள் வழியில் தோன்றியவன் ரகு. இவனுடைய பேரனே பிரசித்தி பெற்ற இராமனின் தந்தையாகிய தசரதன், அஜனின் மகன்.

சந்த்ர வம்ஶம்:
ப்ரஹ்மாவின் மானஸீக புத்ரர்களில் ஒருவரான அத்ரியின் தவப்பலனாக சோமன் பிறந்தான்.  அவன் பல்லாண்டுகள் தவமிருந்து செடி, கொடி, மரங்கள்,  பிராமணர்கள், சமுத்திரங்களின் தலைமைப் பதவியை ப்ரஹ்மனால் கொடுக்கப்பட்டான்.  ராஜசூய யாகமும் செய்த அவன் அகந்தையால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் மனைவியைக் கடத்திச் சென்று அவளிடம் புதனை மகனாகப் பெற்றான்.  அவளை மீட்க ப்ருஹஸ்பதியின் பக்கம் தேவர்களும், சிவபெருமானும் சோமனின் பக்கம் சுக்ராச்சார்யாருடன் அசுரர்களும் போரிட்டனர்.  ப்ரஹ்மா இதை நிறுத்தி தாரையை ப்ருஹஸ்பதிக்கு மீட்டுக்கொடுத்தார்.  தேவகுரு புதனை ஏற்கவில்லை.

புதனுக்கும் இளைக்கும் தோன்றியவன் புரூரவஸ்.  அந்த வம்சத்தில் வந்தவன் நகுஷன், அவனுக்கும் விரஜாவுக்கும் பிறந்தவர்கள் யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்ற அறுவர்.  யயாதி, சுக்ரரின் மகள் தேவயானியையும், தானவர் மகளான ஶ்ரமிஷ்டையையும் மணந்து கொண்டான்.  தேவயானிக்கு யது, துர்வஸு என்ற புதல்வர்களும், த்ருஹ்யு, அனு, புரு மூவர் ஷ்ரமிஷ்டாவிற்கும் பிறந்தனர்.  

புருவிடம் இளமையைப் பெற்றுக் கொண்ட யயாதி, நீண்ட காலம் உலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து மகனிடம் அவன் இளமையைத் தந்தான். புருவின் பரம்பரையில் வந்தவன் பரதகண்டம் என்று பெயர் வரக் காரணமான பரதனாவான். பரதனின் பரம்பரையில் வந்த 'குரு' என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர்களே கெளரவர்கள்.

யயாதி மன்னனின் மகனாகிய துர்வாசுவின் பரம்பரையில் வந்தவர்களே பாண்டியர்கள், கேரளர்கள், சோழர்கள்.

த்ருஹ்யு பரம்பரையில் வந்தவர்களே காந்தார மன்னனாகிய சகுனி முதலிய காந்தார தேசத்தவர், யயாதியின் பேரனாகிய சஹஸ்ரதனின் வழியில் வந்தவனே இராவணனை வென்ற கார்த்தவீர்யார்ஜுனன், இவர்கள் ஹைதயர்கள் எனப்படுவர்.  யதுவிற்கு ஸஹஸ்ரதன், பயோதன், க்ரோஷ்டு, நீலன், அஞ்சிகன் புதல்வர்கள்.  குரோஷ்டுவின் வழியில் வந்தவர்கள் வ்ருஷ்ணிகள், அந்தகர்கள்.

பூமண்டல வர்ணனை: விஷ்ணு புராணத்தில் விரிவாக.  கல்பங்கள் முடியும் போது பூ, புவ:, ஸுவ: லோகங்கள் மட்டுமே அழியும்.  உத்கல (ஒரிஸ்ஸா) தேசத்தில் கோனார்க் அல்லது கோனாதித்யனுக்குக் கோவில் உள்ளது (அர்க்கன், ஆதித்யன் சூர்யனின் பேர்கள்).  இக்கோயிலின் எதிரே கிழக்கு முகமாக நின்று கொண்டு எதிரே உள்ள மணலில், எட்டு இதழ்களை உடைய ஒரு தாமரையை சந்தனக் கட்டையால் வரைய வேண்டும். அத்தாமரையின் நடுவே ஒரு தாமிரப் பாத்திரத்தில் நெய், எள், தண்ணிர், சிவந்த சந்தனக் கட்டை, சிவப்புப் பூக்கள், தர்ப்பை ஆகியவற்றைப் போட்டு, தாமரையின் நடுவே அப்பாத்திரத்தை வைத்து சூரியன் புறப்படுகின்ற நேரத்தில் வழிபட்டால் முன் ஏழு ஜென்மங் களில் செய்த பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

ஒரே ஆதித்தன் பன்னிரண்டு வகையான பணிகளைச் செய்கிறான்.   இந்திரன் அசுரர்களை அழிக்கிறான்.  தத்தன் உயிர்களைப் படைக்கிறான்.  பர்ஜன்யன் மழை பொழிவிக்கிறான்.  த்வஷ்டா தாவரங்களிலும், பூஷ்ணன் தான்யங்களை உற்பத்தி செய்கிறான்,  அர்யமாவாக காற்றை வீசுகிறான்,  பகலனாக எல்லா உயிர்களிலும் இருக்கிறான்.  விவஸ்வான் நெருப்பிலும், விஷ்ணு பகைவர்களையும் அழிக்கிறான். அம்சுமான் காற்றிலும், வருணன் நீரில், மித்ரன் சந்த்ரனிலும், சமுத்ரத்திலும் இருக்கிறான்.
இப்படி ஒரே சூர்யன் 12 மாதங்களில் 12 அணுக்களில் ஒளிர்கிறான்.    12 சிறப்புப் பெயர்களும் அவனுக்குத் தரப்பட்டுள்ளன. அவை ஆதித்யா, சவிதா, சூர்யன், மித்ரன், அர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, திவாகரன், சித்ரபானு, ரவி. தவிர நான்முகனே சூரியனுக்கு 108 பெயர்களைக் கூறுகிறார் பிரம்ம புராணத்தில்.

பூரி ஜகன்னாதர்: சத்தியயுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரத்யும்னன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.  ஷிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரத்தில், அந்நதிக் கரையில் மகாகாளர் கோயிலும், கோவிந்தஸ்வாமி, விக்ரம ஸ்வாமி என்ற இரண்டு விஷ்ணு ஆலயங்களும் ஏற்கெனவே இருந்தன.  மஹாகாளரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு,   இதெல்லாம் தாண்டி ஒரு புது ஆலயம் விஷ்ணுவுக்கு எழுப்ப இடம் தேடி புருஷோத்தம க்ஷேத்ரம் அடைந்தான்.   பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது. யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங்களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று.   எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான். அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார்.

அந்த க்ஷேத்ரத்திலே தான் இப்போது கோயில் நிர்மாணம் தொடங்கு வதற்கு முன் ஒர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது. பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர்.  எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார்.  மறுநாள் அந்த மரத்தை வெட்டித் தயாரித்த பொழுது விஷ்ணுவும், விஸ்வகர்மாவும் அந்தணர் வேடத்தில் வந்து உடனடியாக பலராமன், கிருஷ்ணன், சுபத்திரை ஆகிய மூவருடைய சிலைகளையும் விநாடி நேரத்தில் செய்து முடித்தனர்.

12 வருட பிரளய நெருப்பை அணைக்கும் மாமழை பன்னிரண்டு வருடங்கள் விடாது பெய்தது. இப்பொழுது நெருப்புக்குப் பதிலாக எங்கும் நீர் மயம். நீரில் மிதந்த ஆலமரத்தின் கிளை ஒன்றில் ஒரு பொன் படுக்கையில் பாலகன் ஒருவன் படுத்திருக்கக் கண்டார் மார்க்கண்டேயர். அப்பாலகனின் ஆணையின்படி அவன் வாயினுள் சென்றார் மார்க்கண்டேயர். பாலகன் வயிற்றினுள் அண்டங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பது கண்ட மார்க்கண்டேயர் வெளியே வந்து விஷ்ணுவை துதித்துக் கொண்டு பல்லாண்டுகள் அவருடனேயே இருந்தார். அவர் தவத்தை மெச்சிய விஷ்ணு, அவர் வேண்டும் வரத்தைக் கொடுப்பதாகக் கூறினார். உடனே மார்க்கண்டேயர் புருஷோத்தம க்ஷேத்திரத்தில் சிவனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும். மக்கள் மனத்தில் அரியும் சிவனும் ஒன்று என்ற எண்ணம் நிலைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விஷ்ணுவும் அதற்கிசையவே சிவபெருமானுக்கு “புவனேஷ்வர்” ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.   ஸ்வேதா என்ற நேர்மையுள்ள அரசன் ஜகந்நாதர் ஆலயத்திற்கு அருகில் ஸ்வேத மாதவன் என்ற பெயருடைய விஷ்ணு ஆலயத்தைக் கட்டினார்.

மஹாபலி கதை: மற்ற புராணங்களில் விரிவாக.

கங்கை கௌதமியான கதை:  விக்ரம அவதாரத்தில் ப்ரஹ்மன் கமண்டல நீரால் விஷ்ணுவின் பாதத்தைக் கழுவ, அது நாற்புறங்களில் பிரிந்து ஓடியது.  ஒரு பகுதி சிவனார் தலையில் கங்கையானது.  பார்வதியின் கவலையைப் போக்க கங்கையை சிவன் தலையிலிருந்து கீழே இறக்க விக்னேசர் விரும்பினார்.  எங்கும் பஞ்சம் படர்ந்திருந்த போது கௌதமர் ஆஶ்ரமம் மட்டும் செழிப்பாயிருக்கக்கண்டு தேவர்கள் அங்கிருந்தனர்.    பார்வதியின் தோழி ஜயாவை ஒரு பசுவாக அவர் ஆஶ்ரமத்தில் அங்குமிங்கும் ஓடச்சொன்னார்.  கௌதமர் ஒரு தர்ப்பையால் அதை விரட்ட முயன்ற போது அது இறந்து விட்டது.  பசுவைக் கொன்ற காரணத்தால் அங்கிருந்த புறப்பட்ட தேவர்கள் இருக்க,  விக்னேசர் கங்கையை வரவழைத்து அப்பசுவை எழுப்பச்சொன்னார்.  அப்படியே கௌதமர் தவம் செய்து சாதித்தார்.  

கபோத தீர்த்தம்: (கபோத - புறா) கங்கையின் ஒரு படித்துறை.  ஜோடிகளில் ஒரு புறாவை வேடன் பிடித்து, இரவு உறங்கும்போது மற்றொரு புறா அவன் குளிரைப் போக்க நெருப்பை மூட்டி அதில் விழுந்து உயிரை விட்டது, இதைக் கண்டு இரங்கிய வேடன் மற்றொரு புறாவை விடுவித்ததும் என்னை உணவாக்கிக்கொள் என்று அதுவும் அந்த தீயில் விழுந்து உயிரை விட்டது.  விருந்தோம்பலில் சிறந்த இரண்டையும் தேவலோக தேர் வந்து அழைத்துச்சென்றது கண்ட வேடன் அன்றிலிருந்து தன் தொழிலை விட்டான்.

கருட தீர்த்தம்: நாகர்களில் ஒருவனான அனந்தன் மகன் மணிநாகன் பரமேஶ்வரனைத் தவம் புரிந்து கருடனால் அழிக்க முடியாத வரம் பெற்றான்.  ஆனால் அவனை கருடன் பிடித்து சிறை வைத்து விட்டான், நந்திதேவர் மூலம் இதையறிந்த மஹாவிஷ்ணு அவனை விடுவிக்கச் சொன்னார்.  நீங்கள் என் பலத்தாலேயே பறந்து பகைவர்களை வென்றீர்கள், உங்களை விட பலவான் நான் என்று அவரிடமே கூறினான் கருடன்.  அவனைத் தன் சுண்டு விரலால் நசுக்கி விட்டார்.  வருந்தி விமோசனமாக ஈஶ்வரனைத் துதித்து அவர் சொற்படி 15 நாட்கள் மூழ்கி விடுதலை பெற்ற படித்துறை.

விஶ்வாமித்ர தீர்த்தம்: உலகெங்கும் பஞ்சம் படர்ந்த போது, வழியில்லாமல் இறந்து கிடந்த நாயின் உடலைத் தீயிலிட்டு தேவர்கள், பித்ருக்களுக்கு படைத்து சீடர்களோடு உண்ண முற்பட்டார்.   இந்த்ரன் அதற்கு பதில் அம்ருதம் தந்த போது உலகம் பஞ்சத்தில் இருக்க எனக்கு மட்டும் அம்ருதம் வேண்டாம்.  இந்த சூழலில் நாயிறைச்சியே போதும் என முற்பட்டபோது, வேறு வழியின்றி தேவேந்த்ரன் மழையைப் பொழிந்து வளத்தை உண்டாக்கினான்.  அந்த துறையே இது.

ஶ்வேதா என்ற வேதியன் பெரும் சிவபக்தன், அவன் இறந்த போது, உயிரை எடுத்துச்செல்ல வந்த யமபடர்களையும், யமனையும் கார்த்திகேயன் நந்தி, விக்னேசரோடு சேர்ந்து கொன்று விட்டார்.  கௌதமி தீர்த்தத்தை மீண்டும் கொண்டு வந்து தெளித்த போது அவர்கள் உயிர்த்தெழுந்தனர்.  சிவபக்தர்களை இனி அணுகுவதில்லை என்று சென்றனர்.  

குபேரனோடு நட்புடன் இருந்த ராவணாதியர்கள் தாய் சொற்படி அவனை விரட்டி விட அவன் தாத்தா புலஸ்த்யர் சொற்படி சிவனைக் குறித்து கௌதமி நதிக்கரையிலேயே தவமிருந்து அழியாத செல்வத்திற்கு அரசனானான். 

ஹரிச்சந்த்ரன் மகப்பேறின்றி வருந்தியபோது பர்வதர், நாரதர் சொற்படி வருணனை வேண்டி ரோஹிதனைப் பெற்றான்.  ஆனால் அவனைத் தனக்கே பலியாகக் கேட்டான் வருணன்.  ஒப்புக்கொண்ட ஹரிச்சந்த்ரன் தீட்டு கழியவில்லை, பல் முளைக்கவில்லை, இது பால் பற்கள், இன்னும் க்ஷத்ரிய கலைகளைக் கற்கவில்லை என்று தள்ளிக்கொண்டிருந்தான்.  அடுத்த முறை வருணன் வந்த போது ரோஹிதன் தான் விஷ்ணுவைக் குறித்து ஒரு யாகம் செய்து விட்டு பலியாகிறேன் என்று கூறினான்.  காட்டிற்குச் சென்றிருந்த போது அஜிகர்த்தா எனும் முனிவரிடம் பெரும் தானங்களைக் கொடுத்து அவர் மூன்று பிள்ளைகளை நடுவுள்ள ஸுனக்ஷேபனை யாகப்பசுவாகப் பெற்று வந்தான்.    ப்ராஹ்மண ஹத்திக்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஹரிச்சந்த்ரன் மறுத்த போது, கௌதமி நதிக்கரையில் செய்யும் யாகங்களில் பலி தேவையில்லை, அங்கே செய்யுங்கள் என அசரீரி ஒலிக்க அனைவரும் அப்படியே செய்தனர்.  சுனக்ஷேபனை விஶ்வாமித்ரர் தத்தெடுத்துக்கொண்டார்.  

ததீசியின் தவபலத்தால் அவர் ஆஶ்ரமத்திற்கு அசுரர்கள் பயம் இல்லை.  இதையறிந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை அவரிடம் ஒப்படைத்திருந்தனர்.  பூஜை, உபயோகம் இன்றி ஒளி குறைந்து மறையத்தொடங்கிய ஆயுதங்களை, உலகப் பற்றை விட்டவர் இவைகளை வைத்திருத்தல் ந்யாயமில்லை, இதனால் அசுரர்களோடு விரோதம் வரும் என்று மனைவி லோபாமுத்ரை சொற்படி கங்கையில் கழுவி அதன் நீரை குடித்ததும் அவர் உடல் மேலும் பலமடங்கு ஒளி பெற்றது.  மீண்டும் தேவைப்பட்டபோது தேவர்கள் வந்து ஆயுதங்களைக் கேட்க அவர் யோக வழியில் தன் உடலை விட்டு தன் எலும்பில் ஆயுதங்களை உண்டாக்கிக்கொள்ள சொன்னார்.  அப்படியே விஶ்வகர்மா வஜ்ராயுதம் செய்து தந்தான்,  கர்ப்பவதியான முனிவர் மனைவி பின்னர் இதை அறிந்து குழந்தை பிறந்ததும் அதை ஒரு அத்தி (பிப்பலம்) மரத்தின் காப்பில் விட்டு, தீயில் உயிரை மாய்த்துக்கொண்டாள்.  பிப்பலன் வளர்ந்து தவத்தால் பலம் பெற்று சிவனைக்குறித்து தேவர்கள் அழிவிற்கு வேண்டினான்.  சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பூதம் முதலில் அவனும் தேவர்கள் படைப்பில் வந்தவனே என்று துரத்தியது.  சிவனிடம் பணிந்த அவனுக்கு தேவ விமானத்தில் அவன் பெற்றோர்களை காட்டியருளினார்.  பூதமும் ஒரு நதியாகி கங்கையோடு கலந்து விட்டது.  

விருத்த ஸங்கமம்: கௌதமரின் மகன் விருத்த கௌதமன் ஒரு மூக்கரையன், படிப்பில்லாதவன், இளவயதடைந்த அவன் ஒரு சமயம் காட்டில் ஒரு குகையைக் கண்டு அதில் இருந்த வயதான ஒரு மூதாட்டியை வணங்க முற்பட்டான்.  அவள் அவனை தனக்கு குரு என்று கூறி தடுத்து விட்டாள்.   நான் உன் குழந்தையல்லவா, நான் எப்படி உனக்கு குருவாவேன் என்று அவன் கேட்க, ரிஷத்வஜன் எனும் அரசனுக்கும் சுஷ்யமை எனும் அப்ஸர ஸ்த்ரீக்கும் தான் பிறந்ததாகவும், நான் முதலில் காணும் ஆடவனே எனக்குக் கணவன் என்று அவர்கள அங்கேயே விட்டுச்சென்று விட்டதாகவும், பல ஆண்டுகள் கழிந்த தான் இப்போது முதல் முதலாக ஒரு ஆடவனை, உன்னை காண்கிறேன், மணக்காவிட்டால் இறந்து விடுவேன் என்றாள்.  இவன் ஒரு வழியாக தான் அழகாகவும், கல்விமானாகவும் ஆனதும் உன்னை மணப்பேன் என்றான்.  அவள் தனது வருண, ஸரஸ்வதி உபாஸனையால் அவனை அங்கனமே செய்து மணந்து கொண்டாள்.  இந்த ஜோடியை மற்ற முனிசீடர்கள் கேலி செய்யவே, அகஸ்த்யர் சொற்படி கௌதம கங்கையில் நீராடி இருவருமே இளைய, அழகிய வடிவினரானார்கள்.  அந்த துறையே விருத்த ஸங்கமம்

நாக தீர்த்தம்: சூரசேன ராஜனுக்கு வெகு காலம் கழித்து ஒரு குழந்தை அதுவும் நாகமாக பிறந்தது.  ஆனால் காலம் கழிந்து அது மனித மொழியில் பேசி, வேத சாஸ்த்ரங்களையும் முடித்தது.  ஸ்வர்க்கம் கிட்ட தனக்கு மணம் முடித்து வைக்கவேண்டும் இல்லாவிட்டால் இறந்து விடுவேன் என்றது.  ஒருவருக்கும் தெரியாமல் வளர்ந்த இதன் விபரம் தெரியாத அவர் அமைச்சர் விஜயராஜனின் மகள் போகவதியை தேர்ந்தெடுத்தார்.  இளவரசன் சார்பில் அவன் வாளுக்கு மாலையிட்டு புகுந்த வீட்டுக்கு வந்த அவள் விஷயம் தெரிந்ததும், மானுடப்பிறவியான தனக்கு நாகராஜன் கிடைத்தது பாக்யமே என்று விட்டாள்.  சிவ கிங்கரர்களில் ஒருவனாயிருந்து சிவ-பார்வதி பேச்சின்போது சிரித்து விட்ட காரணத்தால் சபிக்கப்பட்ட அவனுக்கு முன் ஜென்ம நினைவுகளும் வந்தன.  கௌதம கங்கையில் நீராடி இருவரும் விமோசனம் பெற்றனர்.

நான்முகனும், மாத்ரி தீர்த்தம்: முன்பொரு சமயம் ஹரி, ப்ரஹ்மாதிகளாலும் வெல்ல முடியாத தேவர்களுக்கு ஆதரவாக பரமேஶ்வரன் இருந்து அசுரர்களை பாதாளத்திற்கு விரட்டியடித்தபோது, அவரின் வியர்வைத் துளிகளிலிருந்து மாத்ரி கணங்கள் புறப்பட்டு அவைகளும் அசுரர்களை கொன்று குவித்தன.  அந்த இடமே மாத்ரி தீர்த்தம்.  அப்போது ப்ரஹ்மனின் ஐந்தாவது தலை கழுதை உருவிலிருந்து கொண்டு பயந்தோடிய அசுரர்களை மீண்டும் போரிடச்சொல்லி ஆதரவாயிருப்பதாக பேசியது.  மற்ற தலைகள் தங்களுக்கு சார்பாக இருக்க இது மட்டும் அசுரர்களுக்கு சாதகமாயிருக்கக்கண்டு பயந்த தேவர்களை சிவபெருமானையே மீண்டும் சரணடையச்சொன்னார் மஹாவிஷ்ணு.  கீழே விழுந்தால் பூமி சிதறிவிடும் என்றிருந்த அந்த ஐந்தாவது தலையை கிள்ளி தன் கையிலேயே வைத்துக்கொண்டார் பரமேஶ்வரன்.  அந்த இடமே ப்ரஹ்ம தீர்த்தம்

யம தீர்த்தம், அக்னி தீர்த்தம்: அனுஹ்ரதன்-ஹேதி என்ற புறா ஜோடிகளும், உலூகன்-உலூகி என்ற ஆந்தை ஜோடியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.  அனுஹ்ரதன் யமனின் பேரன், உலூகன் அக்னி குலத்தைச் சேர்ந்தது.  தங்களிடமிருந்து ஆயுதங்களையெடுத்து இவைகள் போரிட்டுக்கொண்டிருந்ததில் அழிவைக் கண்ட அவர்கள் இவர்களை சமாதானப்படுத்தினர்.   இவைகள் வசித்த இடமே இந்த தீர்த்தங்கள்.

பில்லா தீர்த்தம்: பில்லா என்ற வேடனும், வேதா என்ற ப்ராஹ்மணனும் மாறி, மாறி ஒருவரை ஒருவர் அறியாமல் காட்டிலிருந்து ஒரு சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தனர்.  இவனுடைய இறைச்சி படையல்களை அகற்றி அவர் பூஜிப்பதும், அவர் பூக்களை அகற்றி இவனும் பூஜித்து இருந்தனர்.  ஒரு நாள் அவனுக்கு இறைவன் காட்சி தந்ததை கண்ட ப்ராஹ்மணர் உங்களை உடைப்பேன் என கோபித்தார்.  மறுநாள் வரை அவரை பொறுமை காக்கச் சொன்ன இறைவன் மறுநாள் ரத்தத்துளிகள் தென்பட இருந்தார்.  இந்த ப்ராஹ்மணர் அவைகளை துடைத்து விட்டு நீரால் கழுவி பூஜித்து முடித்தார்.  பின்னர் வேடன் வரும்போது மீண்டும் அவனையும் சோதித்தார்.  இறைவன் உடலில் ரத்தத்துளிகளை கண்ட அவன் தன் பாவங்களும் காரணமாயிருக்கும் என்று தன்னையும் உடல் முழுதும் கீறிக்கொண்டான்.  உண்மை பக்தியை உணர்ந்தார் ப்ராஹ்மணர்.  

கௌதமன் என்ற அதர்ம வழியில் வளர்ந்த அந்தணனும், மணிகுண்டலனெனும் தர்ம வழி வளர்ந்த வைஶ்யனும் நண்பர்கள்.  அயல் நாடு சென்று திரவியம் ஈட்டலாம் என்று கௌதமன் மணிகுண்டலனை வற்புறுத்தி பெரும் பொருளோடு வரச்செய்தான்.  வழியில் தர்மவழி தான் உயர்ந்தது, அதர்ம வழியே உயர்ந்தது என்றும் வாதிட்டுக்கொண்டே வந்தனர் இருவரும்.    யாரையாவது கேட்டு முடிவெடுக்கலாம் என்று கேட்டபோது அனைவரும் அதர்ம வழியில் வாழ்பவனே செழிக்கிறான் என்றே சொன்னார்கள்.  பணயத்தின் படி மணிகுண்டலன் செல்வமனைத்தையும் பிடுங்கிக்கொண்டான் கௌதமன்.  அப்போதும் தர்ம வழியையே பாராட்டிப் பேசினான் மணி குண்டலன்.  அடுத்தடுத்த பணயத்தில் கரங்களையும், கண்களையும் இழந்தான் மணிகுண்டலன்.   எனினும் தர்மத்தையே உயர்த்தி பேசிய அவனை காட்டில் விட்டுச்சென்று விட்டான் கௌதமன்.

அந்த இடம் கௌதமி நதிக்கரை.  அங்கிருந்த விஷ்ணு விக்ரஹத்திற்கு இரவில் விபீஷணனின் மகன் தினமும் வந்து பூஜை செய்வது வழக்கம்.  அன்றிரவு கீழே கிடந்த இவனைக் கண்ட அவன் விஷயங்களை அறிந்து தன் தந்தையிடம் சொன்னான்.  விபீஷணன் அப்போது மரமாய் வளர்ந்திருந்த விஶல்யகரணி மூலிகையைக் கொண்டு மணிகுண்டலனை குணப்படுத்தி அழைத்துச்சென்றான்.  வழியில் தன் குருட்டுப் பெண்ணை குணப்படுத்துபவனுக்கே அவளை மணம் முடித்து, ராஜ்யத்தை ஒப்படைப்பது என்ற முடிவில் இருந்த ஒரு அரசனின் பெண்ணை விஶல்யகரணியைக் கொண்டு குணப்படுத்திய மணிகுண்டலன் அந்நாட்டுக்கு அரசனாக்கப்பட்டான்.  பிற்காலத்தில் பொருள்களை இழந்து இழிவான நிலையில் கொண்டு வரப்பட்ட கௌதமனுக்கும் நிதிகளைத் தந்து தேற்றினான் மணிகுண்டலன்.

கண்டு முனிவரின் உக்ரமான தவத்தைக் கெடுக்க ப்ரேமலோசனை எனும் அப்ஸரஸை அனுப்பினான் இந்த்ரன்.  அவளும் அவரை மயக்கி மனைவியானாள்.  அவளோடு திளைத்திருந்த கண்டு முனிவர் பலகாலங்கள் அனுஷ்டானங்கள் இன்றி அதில் கழிந்து விட்டதை உணர்ந்து மனைவியானதால் அவளை சபிக்காமல் திருப்பி அனுப்பி விட்டு, புருஷோத்தம க்ஷேத்ரத்தில் விஷ்ணுவால் தவம் செய்ய ஆசிர்வதிக்கப்பட்டார்.  இவர்கள் பெண்ணே மரீஷை.

சண்டாளன் ஒருவன் ஒரு சமயம் ப்ரஹ்மராக்ஷஸனிடம் அகப்பட்டுக்கொண்டான்.  20 வருடங்களாக ஏகாதஸி கொண்டாடி வருவதாகவும், அன்றைய ஏகாதஸி முடிந்ததும் நான் உனக்கு உணவாகிறேன் என்று கூறி அதன்படியே வந்த அவனிடமிருந்து 2 மணி நேர ஏகாதஸி புண்ணியத்தை யாசித்துப் பெற்று அதனால் சாப விமோசனம் பெற்ற அந்த ப்ரஹ்ம ராக்ஷஸன் உபநயனத்திற்கு முன்பே யாகங்களில் கலந்து கொண்ட பாவத்தால் ப்ராஹ்மணனான தான் இந்த சாபம் பெற்றதைச்சொல்லி, சொல் தவறாது திரும்ப வந்த நீயும் சண்டாளனாக இருக்க முடியாது என்று கூறிச்சென்றான்.    பின் தவம் செய்த இந்த சண்டாளன் முற்பிறவியில் வேத பண்டிதனாயிருந்த போது, யாசித்துப் பெற்ற உணவில் பசுவின் தூளி சிறிது விழுந்து விட்டதால் அதை வீசியெறிந்து விட்டதற்காக சண்டாளனானது குறித்து நினைவு கொண்டான்.  தவத்தால் விமோசனம் பெற்றான்.  

ஸ்வயம்புவான ப்ரஹ்மாவின் தவத்தின் பலனாக ப்ரணவ ஒலி கேட்கப்பெற்றார்.  அதன் பிறகு அவரது முகங்களிலிருந்து 24 எழுத்துக்கள் கொண்ட காயத்ரியும், பின்னர் வேதங்களும் தோன்றின.  வேதங்களுக்கு காயத்ரியே மாதா.  

யோகம் என்பது ஆத்மாவை பரப்ரஹ்மத்துடன் சேர்ப்பது.  எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மா ஒன்றே என நிலைப்படுவது.   வேத, புராணங்களை பயின்று முறையாக யோகப்பயிற்சி, புலனடக்கம், சாத்வீக உணவு, இனிய ப்ரதேசத்தில் வாசத்தை மேற்கொண்டால் இந்நிலையை அடையலாம்.

ப்ரஹ்ம புராணம் முற்றிற்று.

Monday, September 9, 2019

பாவயாமி ரகுராமம் தமிழ்ப் பொருளுடன்

பாவயாமி ரகுராமம்
ராகம்: சாவேரி ( ராகமாலிகா )
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: சுவாதி திருநாள்

முழு ராமாயணம் சிறிய ஸம்ஸ்க்ருத பாடல் வடிவில், புரிந்து பாட தமிழில் பொருளுடன்

- தினசரி பூஜை, பயணத்தின் போதும், தீட்டு அது, இதுன்னு ப்ரச்சினை இல்லாமல் எப்போதும் பாட, த்யானிக்க உகந்தது
- குழந்தைகளுக்கும், பொது இடங்களிலும் கதை சொல்ல ஒரு கையேடு போலவும் பயன்படுகிறது.
- பல ராகங்களில் இதன் பகுதிகளை மாலையாக தொடுத்துப் பழகவும் எளிதாக, கேட்க இனிமையான எம்.எஸ். சுப்புலட்சுமி,  ஸ்ரீ செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயர் குரல்களில்  https://www.youtube.com/watch?v=P8S4Z9Khg-w

https://www.youtube.com/watch?v=oRXGs3Y0ZXQ

பல்லவி (சாவேரி)
भावयामि रघुरामम् भव्य सुगुणारामम् ।
பாவயாமி ரகுராமம் பவ்ய சுகுணாராமம் |
பொருள்:
ரகு குலத்து ராமனை த்யானிக்கிறேன், அவன் தெய்வீக நற்குணங்களின் உருவானவன்(தோட்டம்).

அனுபல்லவி
भावुक वितरण परापाङ्ग लीला लसितम् ।।
பாவுக விதரணபரா பாங்கலீலா லசிதம் ||
பொருள்:
ஒளிரும் தன் கடைக்கண்களாலேயே மகிழ்ச்சியும், வளமும் எல்லாருக்கும் தருவதில் மேலானவன்

ஸரிகஸரி, மபதபத, | ரிஸநிதநிதபமகரிஸத.|
ஸரிம, கரிமபத, பமபதஸ, நிதநிதபமபத|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 1 (நாட்டைகுறிஞ்சி)
दिनकरान्वय तिलकं दिव्य गाधिसुत सवना-
वन रचित सुबाहु मुख वधम् अहल्या पावनम् ।
अनघमीश चापभङगं जनक सुता प्राणेशं
घन कुपित भृगुराम गर्व हरमित साकेतम् ॥
தினகரான்வயதிலகம், திவ்யகாதி சுதசவனா
வன, ரசித சுபாஹுமுக வத, மஹல்யா பாவனம்,
அனக மீச சாப பங்க, ஜனகசுதா ப்ரானேசம்,
கன குபித ப்ருகுராம கர்வஹர, மிதசாகேதம்
பொருள்: சூர்ய குலத்திலகம், காதியின் மகன் யக்ஞம் காக்க
சுபாஹுவின் தலைமையிலான அரக்கர்களை அழித்தவன், அஹல்யைக்கு விமோசனம் அளித்தவன்,
தெய்வீகமான ஈஶனின் வில்லை முறித்து ஜனக புத்ரியின் உயிர் நாதனானவன்,
பெருங்கோபத்தோடு வந்த ப்ருகுராமனின் செறுக்கை அடக்கி, அயோத்தி திரும்பியவன்

மகஸ, நி.த.நி.ஸ,ரிகம | நிதம, கரிகமபகரிஸ|
நி.த.நி.ஸரிகமநிதநிபதநிஸநிதநிஸரிகமகசநி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 2 (தன்யாசி)
विहिताभिषेकम् अथ विपिन गतम् आर्य वाचा
सहित सीता सौमित्रीं शान्ततम शीलम् ।
गुह निलय गतं चित्रकूटागत भरत दत्त-
महित रत्नमय पादुकं मदन सुन्दराङ्गम् ॥
விஹிதாபிஷேகம் அத விபின கதம் ஆர்யவாசா
சஹித சீதா சௌமித்ரீம், ஶாந்ததம ஶீலம்,
குஹநிலையகதம், சித்ரகூடாகத, பரத தத்த
மஹித ரத்னமய பாதுகம், மதனசுந்தராங்கம்
பொருள்:
பட்டாபிஷேகம் தடைபட்ட பின் தந்தை சொற்படி வனம் சென்று, ஸீதை, ஸௌமித்ரியுடன் வசித்தவன். அமைதியே உருவானவன்.
குஹன் இருக்குமிடம் சென்றவன், சித்ரகூட பர்வதத்தில் வந்து, பரதனுக்கு தன் மஹிமை பொருந்திய ரத்ன பாதுகைகளை தந்தவன், மன்மதனின் அழகிய அங்கங்கள் உடையவன்.

நி.ஸக,மபகமப, நிஸ | ரிஸரிநிஸபதபக, ரிஸ|
நிஸகமபக, மபநிஸப, நிஸகரிஸநிதபநிஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 3 (மோஹனம்)
वितत दण्डकारण्य गत विराध दलनं
सुचरित घटज दत्तानुपमित वैष्णवास्त्रम् ।
पतगवर जटायु नुतं पञ्चवटी विहितावासं
अति घोर शूर्पणखा वचनागत खरादि हरम् ॥
விதத தண்டகாரண்ய கத விராத தலனம்,
சுசரித கடஜ தத் தானுபம் இதவைஷ்ணவாஸ்த்ரம்,
பதக வர ஜடாயு நுதம், பஞ்சவடீ விஹிதவாசம்,
அதிகோர சூர்ப்பணகா வசனாகத கராதி ஹரம்
பொருள்:
அடர்ந்து விரிந்த தண்டகாரண்யத்தில் செல்லும் போது விராதனை அழித்தவன்,
சிறந்த குடமுனி(அகஸ்த்யர்) தந்த ஒப்பற்ற வைஷ்ணவாஸ்த்ரத்தைக் கொண்டவன்,
பக்ஷி ராஜனான ஜடாயுவால் பூஜிக்கப்பட்டு, பஞ்சவடீயில் வாசம் கொண்டவன்,
அதி கோர சூர்ப்பணகையின் சொல் கேட்டு வந்த கரன் முதலானோரைக் கொன்றவன்.

க, , பகரிகரிஸத.ஸரி| க, , பதஸதபகரிஸரி
கபககரிஸரிகரிரிஸதஸரிகரிகபகபதபதஸ|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 4 (முகாரி)
कनक मृग रूप धर खल मारीच हरमिह
सुजन विमत दशास्य हृत जनकजान्वेषणम् ।
अनघम् पम्पातीर संगताञ्जनेय नभोमणि
तनुज सख्यकरं वाली तनु दलनमीशम् ॥
கனக மிருக ரூபதர கல மாரீச ஹர, மிஹ
ஸுஜன விமத தஶாஸ்ய ஹ்ருத ஜனகஜா ன்வேஷணம்,
அனகம், பம்பாதீர சங்கதா ஞ்சனேய, நபோமணி
தனுஜ ஸக்யகரம், வாலீ தனு தலன, மீஶம்
பொருள்:
பொன்மானின் ரூபம் தரித்த வஞ்சக மாரீசனை வதைத்தவன்,
இங்கு உத்தமர்களை மதிக்காத (உற்றவர் சொல்கேளாத) தசமுகன் திருடிய ஜனகன் மகளை தேடி அலைந்தவன்,
பரிசுத்தமானவன், பம்பா நதிக்கரையில் ஆஞ்சநேயருடன் சேர்ந்தவன், விண்ணில் ஒளிரும் சூர்யபுத்ரனுடன் ஸ்னேஹம் கொண்டவன்,
வாலீயின் உடலை சாய்த்தவன், உயர்ந்தவன்

ப, , மகரிஸ,நி.த.ஸரி| ம, , கரிஸரிமபமநித|
ஸ, ஸநிதபப, மகரிஸநி.த.ஸரிமபநிதமபதஸ
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 5 (பூர்வி கல்யாணி)
वानरोत्तम सहित वायुसूनु करार्पित
भानुशत भास्वर भव्य रत्नाङ्गुलीयम् ।
तेन पुनरानीतान्यून चूडामणी दर्शनं
श्रीनिधिमुदधि तीरेश्रित विभीषण मिलितम् ॥
வானரோத்தம ஸஹித வாயுஸூனு கரா ர்ப்பித
பானுஶத பாஸ்வர பவ்ய ரத்னாங்குலீயம்,
தேன புன ரானீதா ன்யூன சூடாமணி தர்சனம்,
ஸ்ரீநிதி முததி தீரே ஶ்ரித விபீஷணா மிலிதம்
பொருள்:
ஸுக்ரீவனுடன் இருந்தபோது, வாயு புத்ரன் கரங்களில், நூறு ஸூர்ய ஒளி பொருந்திய, தெய்வீகமான தன் ரத்ன மோதிரத்தைத் தந்தவன்,
பின்னர் அவனால் கொண்டுவரப்பட்ட குறையற்ற சூடாமணியைப் பெற்றவன்,
பொக்கிஷங்கள் உறையும் கடற்கரையில் அண்டின விபீஷணனை நண்பனாக்கிக் கொண்டவன்

க, மகரிஸத.ஸ,ரிகம| ப, ,தபஸநிதபமகரி|
கமபம, பக,, மரி, கஸ, ரிக, மபதபஸ, நி|
கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத| (பாவயாமி ரகுராமம்)

சரணம் 6 (மத்யமாவதி)
कलित वर सेतुबन्धं खल निस्सीम पिशिताशन
दलनम् उरु दश कण्ठ विदारणम् अति  धीरम् ।
ज्वलन पूत जनक सुता सहितम् यात साकेतं
विलसित पट्टाभिषेकं विश्व पालं पद्मनाभम् ॥
கலித வரசேது பந்தம், கல நிஸ்ஸீம பிஶிதாஶன
தலனம், உரூ தஶகண்ட விதாரணம், அதி தீரம்,
ஜ்வலன பூத ஜனக ஸுதா ஸஹிதம் யாத சாகேதம்
விலஸித பட்டாபிஷேகம், விஸ்வபாலம், பத்மநாபம்
பொருள்:
சிறந்த கடல் பாலத்தைக் கட்டினவன், வஞ்சகர்களான எல்லையற்ற நரமாமிசம் உண்ணும் அரக்கர்களை அழித்தவன்,
பத்து கழுத்துக்களுடன் உருக்கொண்டவனை அழித்தவன்,  எதற்கும் அஞ்சாதவன்,
நெருப்பால் தூய்மையாக்கப்பட்ட ஜனகபுத்ரியுடன் சேர்ந்தவன், அயோத்தி திரும்பியவன்,
ஒளிரும் பட்டாபிஷேகம் கொண்டவன், உலகைக் காப்பவன், பத்மநாபன்.

ரி, மரிமபநி, பமபநி| ஸ, , நிஸநிபபமமரிஸ|

ராகம்1: ரிபமரிஸநி. ஸரிமப
ராகம்2: தபஸ, நிதபமகமகரி
ராகம்3: ஸ, நி. த.. ஸரிமக ரிஸரி
ராகம்4: க, தபகரிஸரிகபதஸ
ராகம்5: ரிஸத, பதபக, ரிஸ
ராகம்6: நி. ஸமகமநிதநிபதநிஸ
ராகம்0: கரிஸத, ரிஸத, ,ஸத, ,கரிநிதமகரிஸத|

(பாவயாமி ரகுராமம்)

Tuesday, September 3, 2019

நாம ராமாயணம்

நாம ராமாயணம்

- முழு ராமாயணம் சிறிய வடிவில்
- 108 வாக்கியங்கள், தினசரி பூஜை, பயணத்தின் போதும், தீட்டு அது, இதுன்னு ப்ரச்சினை இல்லாமல் எப்போதும் பாட, த்யானிக்க உகந்தது
- குழந்தைகளுக்கும், பொது இடங்களிலும் கதை சொல்ல ஒரு கையேடு போலவும் பயன்படுகிறது.
- ஒவ்வொரு வாக்கியமும் ராமன் பெயரில் முடிவதால் பாபங்களும் தொலைந்து, புண்ணியமும் பலனாக கிடைக்க:
- பல ராகங்களில் இதன் பகுதிகளை மாலையாக தொடுத்துப் பழகவும் எளிதாக, கேட்க இனிமையான எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலின் நான் கேட்டது, https://gaana.com/playlist/shruthi-yazbh-mssubbulakshmi

- ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் மேல கம்ப்யூட்டர் மௌஸ நகர்த்தினா ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு அருமையாக இங்கே:
https://www.greenmesg.org/stotras/rama/nama_ramayana.php


நாம ராமாயணம்
नाम रामायणम्

1. பால காண்டம்
॥ बाल काण्डम् ॥

1. சுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
शुद्ध ब्रह्म परात्पर राम् ॥१॥
அனைத்திற்கும் மேலான, மெய்யறிவின் வடிவினன் ராமன்

2. காலாத்மக பரமேச்வர ராம்
कालात्मक परमेश्वर राम् ॥२॥
காலத்தின் வடிவான பரமேஶ்வரன் ராமன்

3. சேஷதல்ப ஸுகநித்ரித ராம்
शेषतल्प सुख निद्रित राम् ॥३॥
(ஆதிசேஷனெனும்) அரவின் மேல் சுகமாக (யோக) நித்திரை கொள்ளும் ராமன்

4. ப்ரஹ்மாத்யமர ப்ரார்த்தித ராம்
ब्रह्माद्यामर प्रार्थित राम् ॥४॥
ப்ரஹ்மா முதலான தேவர்களால் ப்ரார்த்திக்கப்படும் ராமன்

5. சண்டகிரண குல மண்டந ராம்
चण्डकिरण कुल मण्डन राम् ॥५॥
மஹிமையான சூர்ய குலத்தை அலங்கரித்த ராமன்

6. ஸ்ரீமத் தசரத நந்தன ராம்
श्रीमद्दशरथ नन्दन राम् ॥६॥
ஒப்பற்ற தசரதனின் மகன் ராமன்

7. கௌசல்யா ஸுக வர்த்தந ராம்
कौसल्या सुख वर्धन राम् ॥७॥
கௌசல்யையின் சந்தோஷம் வளர்த்த ராமன்

8. விச்வாமித்ர ப்ரியதன ராம்
विश्वामित्र प्रियधन राम् ॥८॥
விஶ்வாமித்ரரின் ப்ரியமான பொக்கிஷம் ராமன்

9. கோர தாடகா காதக ராம்
घोर ताटका घातक राम् ॥९॥
கோரமான தாடகையை அழித்த ராமன்

10. மாரீசாதி நிபாதக ராம்
मारीचादि निपातक राम् ॥१०॥
மாரீசன் முதலானவர்களை அழித்த ராமன்

11. கௌசிக மக ஸம்ரக்ஷக ராம்
कौशिक मख संरक्षक राम् ॥११॥
கௌசிக(விஶ்வாமித்ரர்) யாகத்தை காத்த ராமன்

12. ஸ்ரீமத் அஹல்யோத்தாரக ராம்
श्रीमदहल्योद्धारक राम् ॥१२॥
ஒப்பற்ற அஹல்யைக்கு விமோசனம் அளித்த ராமன்

13. கௌதம முனி ஸம்பூஜித ராம்
गौतम मुनि संपूजित राम् ॥१३॥
கௌதம முனிவரால் நன்கு பூஜிக்கப்பட்ட ராமன்

14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம்
सुर मुनिवर गण संस्तुत राम् ॥१४॥
தேவர், சிறந்த முனிவர் கூட்டங்களால் துதிக்கப்பட்ட ராமன்

15. நாவிக தாவித ம்ருது பத ராம்
नाविक धावित मृदु पद राम् ॥१५॥
ஓடக்காரன் நீரால் சுத்தம் செய்த ம்ருதுவான பாதங்கள் கொண்ட ராமன்

16. மிதிலாபுர ஜன மோஹக ராம்
मिथिलापुर जन मोहक राम् ॥१६॥
மிதிலை மக்களை ஆட்கொண்ட ராமன்

17. விதேஹ மானஸ ரஞ்ஜக ராம்
विदेह मान स रञ्जक राम् ॥१७॥
மெய்யறிவை உணர்ந்தவரின் (ஜனகர்) கௌரவம் வளர்த்த ராமன்

18. த்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம்
त्र्यंबक कार्मुक भञ्जक राम् ॥१८॥
முக்கண்ணரின் வில்லை முறித்த ராமன்

19. ஸீதார்ப்பித வர மாலிக ராம்
सीतार्पित वर मालिक राम् ॥१९॥
சீதை அணிவித்த ஸ்வயம்வர மாலையுடைய ராமன்

20. க்ருத வைவாஹிக கௌதுக ராம்
कृत वैवाहिक कौतुक राम् ॥२०॥
சிறப்பான திருமணம் கொண்ட ராமன்

21. பார்க்கவ தர்ப்ப விநாசக ராம்
भार्गव दर्प विनाशक राम् ॥२१॥
பார்க்கவ(பரஶுராமன்) பெருமை அழித்த ராமன்

22. ஸ்ரீமத் அயோத்யா பாலக ராம்
श्रीमदयोध्या पालक राम् ॥२२॥
சீர் மிகு அயோத்தியின் காவலன் ராமன்

2. அயோத்யா காண்டம்
॥ अयोध्या काण्डम् ॥

23. அகணித குணகண பூஷித ராம்
अगणित गुणगण भूषित राम् ॥२३॥
எண்ணிலடங்கா குணக்குவியலை அலங்காரமாக கொண்ட ராமன்

24. அவநீ தநயா காமித ராம்
अवनी तनया कामित राम् ॥२४॥
பூமாதேவியின் மகள் விரும்பிய ராமன்

25. ராகாசந்த்ர ஸமாநந ராம்
राकाचन्द्र समानन राम् ॥२५॥
முழு நிலவினை ஒத்த முகம் கொண்ட ராமன்

26. பித்ரு வாக்கியாச்ரித காநந ராம்
पितृ वाक्याश्रित कानन राम् ॥२६॥
பெற்றோர் சொற்படி கானனம் சென்ற ராமன்

27. ப்ரியகுஹ விநிவேதித பத ராம்
प्रियगुह विनिवेदित पद राम् ॥२७॥
ப்ரியமான குஹன் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட பாதம் கொண்ட ராமன்

28. தத்க்ஷாலித நிஜ ம்ருது பத ராம்
तत् क्षालित निज मृदु पद राम् ॥२८॥
குஹனால் நீரினால் சுத்தம் செய்யப்பட்ட ம்ருதுவான பாதம் கொண்ட ராமன்

29. பரத்வாஜ முகாநந்தக ராம்
भरद्वाज मुखानन्दक राम् ॥२९॥
பரத்வாஜரை ஆனந்தமடையச் செய்த ராமன்

30. சித்ரகூடாத்ரி நிகேதந ராம்
चित्रकूटाद्रि निकेतन राम् ॥३०॥
சித்ரகூட மலையில் வாசம் கொண்ட ராமன்

31. தசரத ஸந்தத சிந்தித ராம்
दशरथ सन्तत चिन्तित राम् ॥३१॥
தசரதரையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த ராமன்

32. கைகேயி தநயார்த்தித ராம்
कैकेयी तनयार्थित राम् ॥३२॥
கைகேயி மகனால் மீண்டும் ராஜாவாக அழைக்கப்பட்ட ராமன்

33. விரசித நிஜ பித்ரு கர்மக ராம்
विरचित निज पितृ कर्मक राम् ॥३३॥
அப்பாவின் ஈம க்ரியைகளை செய்த ராமன்

34. பரதார்ப்பித நிஜ பாதுக ராம்
भरतार्पित निज पादुक राम् ॥३४॥
பரதனுக்குத் தன் பாதுகைகளை தந்த ராமன்

3. ஆரண்ய காண்டம்
॥ अरण्य काण्डम् ॥

35. தண்டகாவந ஜந பாவன ராம்
दण्डकवन जन पावन राम् ॥३५॥
தண்டக ஆரண்ய மக்களை உய்வித்த ராமன்

36. துஷ்ட விராத விநாசன ராம்
दुष्ट विराध विनाशन राम् ॥३६॥
துஷ்ட விராதனை அழித்த ராமன்

37. சரபங்க ஸுதீக்ஷ்ணார்ச்சித ராம்
शरभङ्ग सुतीक्ष्णार्चित राम् ॥३७॥
ஶரபங்கர், ஸுதீக்ஷ்ணரால் பூஜிக்கப்பட்ட ராமன்

38. அகஸ்த்யாநுக்ரஹ வர்த்தித ராம்
अगस्त्यानुग्रह वर्धित राम् ॥३८॥
அகஸ்த்யரின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெற்ற ராமன்

39. க்ருத்ராதிப ஸம்ஸேவித ராம்
गृध्राधिप संसेवित राम् ॥३९॥
பக்ஷிராஜனால் (ஜடாயு) நன்கு சேவிக்கப்பட்ட ராமன்

40. பஞ்சவடீ தட ஸுஸ்தித ராம்
पञ्चवटी तट सुस्थित राम् ॥४०॥
பஞ்சவடீ நதிக்கரையில் வாசம் செய்த ராமன்

41. சூர்ப்பணகார்த்தி விதாயக ராம்
शूर्पणखार्ति विधायक राम् ॥४१॥
சூர்ப்பணகைக்கு துக்கத்தை கற்பித்த ராமன்

42. கர தூக்ஷண முக ஸூதக ராம்
खर दूषण मुख सूदक राम् ॥४२॥
கரன், தூஷணர்களை அழித்த ராமன்

43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம்
सीता प्रिय हरिणानुग राम् ॥४३॥
ஸீதை விரும்பிய மானைத் தொடர்ந்த ராமன்

44. மாரி சார்த்தி க்ருதாசுக ராம்
मारीचार्ति कृदाशुग राम् ॥४४॥
மாரீசனை அழிக்க அம்பை விட்ட ராமன்

45. விநஷ்ட ஸீதா அந்வேஷக ராம்
विनष्ट सीतान्वेषक राम् ॥४५॥
இழந்த ஸீதையை தேடியலைந்த ராமன்

46. க்ருத்ராதிப கதி தாயக ராம்
गृध्राधिप गति दायक राम् ॥४६॥
பக்ஷிராஜனுக்கு மோக்ஷமளித்த ராமன்

47. சபரீ தத்த பலாசந ராம்
शबरी दत्त फलाशन राम् ॥४७॥
சபரீ தந்த பழங்களை உண்ட ராமன்

48. கபந்த பாஹுச் சேதக ராம்
कबन्ध बाहुच्छेदक राम् ॥४८॥
கபந்தனின் தோள்களை சேதித்த ராமன்

4. கிஷ்கிந்தா காண்டம்
॥ किष्किन्धा काण्डम् ॥

49. ஹநுமத் ஸேவித நிஜபத ராம்
हनुमत्सेवित निजपद राम् ॥४९॥
ஹனுமனால் சேவிக்கப்பட்ட பாதங்களுடைய ராமன்

50. நத ஸுக்ரீவாபீஷ்ட த ராம்
नत सुग्रीवाभीष्ट द राम् ॥५०॥
சேவித்த ஸுக்ரீவனின் இஷ்டங்களை பூர்த்தி செய்த ராமன்

51. கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
गर्वित वालि संहारक राम् ॥५१॥
கர்வம் கொண்ட வாலியை வதைத்த ராமன்

52. வாநர தூத ப்ரேஷக ராம்
वानर दूत प्रेषक राम् ॥५२॥
வாநர தூதனை அனுப்பிய ராமன்

53. ஹிதகர லக்ஷ்மண ஸம்யுத ராம்
हितकर लक्ष्मण संयुत राम् ॥५३॥
தன்னையே அண்டின லக்ஷ்மணனுடனேயே இருந்த ராமன்

5. ஸுந்தர காண்டம்
॥ सुन्दर काण्डम् ॥

54. கபி வர ஸந்தத ஸம்ஸ்ம்ருத ராம்
कपि वर सन्तत संस्मृत राम् ॥५४॥
சிறந்த வானர(ஹனுமனால்) சதா நினைக்கப்பட்ட ராமன்

55. தத்கதி விக்ந த்வம்ஸக ராம்
तद्‍ गति विघ्न ध्वंसक राम् ॥५५॥
அந்த ஹனுமன் வழியில் தடைகளை தகர்த்த ராமன்

56. ஸீதா ப்ராணா தாரக ராம்
सीता प्राणाधारक राम् ॥५६॥
ஸீதையின் உயிருக்கு ஆதாரமான ராமன்

57. துஷ்ட தசாநந தூஷித ராம்
दुष्ट दशानन दूषित राम् ॥५७॥
துஷ்ட தசமுகனை(ராவணன்) பழித்த ராமன்

58. சிஷ்ட ஹநூமத் பூஷித ராம்
शिष्ट हनूमद्‍ भूषित राम् ॥५८॥
சீடனான ஹனுமனை அலங்கரித்த ராமன்

59. ஸீதா வேதித காகா வந ராம்
सीता वेदित काका वन राम् ॥५९॥
ஹனுமனிடம் ஸீதை சொன்ன காகாஸுர வதத்தை அறிந்த ராமன்

60. க்ருத சூடாமணி தர்சந ராம்
कृत चूडामणि दर्शन राम् ॥६०॥
ஸீதையின் சூடாமணியை தர்ஶித்த ராமன்

61. கபிவர வசனா ச்வாஸித ராம்
कपिवर वचनाश्वासित राम् ॥६१॥
வானர ஶ்ரேஷ்டனின் வார்த்தைகளால் பரிஹாரம் கொண்ட ராமன்

6. யுத்த காண்டம்
॥ युध्द काण्डम् ॥

62. ராவண நிதந ப்ரஸ்தித ராம்
रावण निधन प्रस्थित राम् ॥६२॥
ராவணன் அழிவை நிச்சயித்த ராமன்

63. வாநர ஸைந்ய ஸமாவ்ருத ராம்
वानर सैन्य समावृत राम् ॥६३॥
வானர சைன்யங்களால் சூழப்பட்ட ராமன்

64. சோஷித ஸரிதீசார்த்தித ராம்
शोषित सरिदीशार्थित राम् ॥६४॥
ஸமுத்ர ராஜனை வேண்டி, வற்றி விடச்செய்வேன் என பயங்கொள்ளச்செய்த ராமன்

65. விபீஷணாபய தாயக ராம்
विभीषणाभय दायक राम् ॥६५॥
விபீஷணனுக்கு அபயம் தந்த ராமன்

66. பர்வத ஸேது நிபந்தக ராம்
पर्वत सेतु निबन्धक राम् ॥६६॥
மலைப்பாறைகளால் ஸமுத்ரத்தில் பாலம் கட்டிய ராமன்

67. கும்பகர்ண சிரச்சேதக ராம்
कुम्भकर्ण शिरच्छेदक राम् ॥६७॥
கும்பகர்ணன் சிரசை அரிந்த ராமன்

68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
राक्षस सङ्घ विमर्दक राम् ॥६८॥
ராக்ஷஸ கூட்டத்தை அழித்த ராமன்

69. அஹிமஹி ராவண சாரண ராம்
अहिमहिरावण चारण राम् ॥६९॥
அஹி ராவணன், மஹி ராவணனின் தடைகளைத் தகர்த்த ராமன்

70. ஸம்ஹ்ருத தசமுக ராவண ராம்
संहृतद शमुख रावण राम् ॥७०॥
ராவணனை அழித்த ராமன்

71. விதி பவ முக ஸுர ஸம்ஸ்துத ராம்
विधि भव मुख सुर संस्तुत राम् ॥७१॥
ப்ரஹ்மா, ருத்ரன், தேவர்களால் துதிக்கப்பட்ட ராமன்

72. க ஸ்தித தசரத வீக்ஷித ராம்
ख स्थित दशरथ वीक्षित राम् ॥७२॥
ஸ்வர்கதிலிருந்த தசரதனால் பெருமையோடு பார்க்கப்பட்ட ராமன்

73. ஸீதா தர்சன மோதித ராம்
सीता दर्शन मोदित राम् ॥७३॥
ஸீதையின் தர்ஶனத்தால் திளைத்த ராமன்

74. அபிஷிக்த விபீஷண நத ராம்
अभिषिक्त विभीषण नत राम् ॥७४॥
பட்டாபிஷேகம் கொண்ட வீபீஷணனால் சேவிக்கப்பட்ட ராமன்

75. புஷ்பக யாநாரோஹண ராம்
पुष्पक यानारोहण राम् ॥७५॥
புஷ்பக விமானத்தில் ஏறிய ராமன்

76. பரத்வாஜாதி நிஷேவண ராம்
भरद्वाजादि निषेवण राम् ॥७६॥
பரத்வாஜர் முதலானோரை தரிசித்த ராமன்

77. பரத ப்ராண ப்ரியகர ராம்
भरत प्राण प्रियकर राम् ॥७७॥
பரதனுக்கு மகிழ்ச்சியான வாழ்வளித்த ராமன்

78. ஸாகேதபுரீ பூஷண ராம்
साकेतपुरी भूषण राम् ॥७८॥
அயோத்தியை அலங்கரித்த ராமன்

79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம்
सकल स्वीय समानत राम् ॥७९॥
அனைவரையும் சொந்தக்குழந்தைகளைப் போல பாவித்த ராமன்

80. ரத்ந லஸத் பீடாஸ்தித ராம்
रत्न लसत्पीठास्थित राम् ॥८०॥
ஒளியுள்ள ரத்ன ஸிம்ஹாஸனத்திலிருந்த ராமன்

81. பட்டாபிஷேகாலங்க்ருத ராம்
पट्टाभिषेकालंकृत राम् ॥८१॥
பட்டாபிஷேகத்தால் அலங்கரிக்கப்பட்ட ராமன்

82. பார்த்திவ குல ஸம்மாநித ராம்
पार्थिव कुल सम्मानित राम् ॥८२॥
மன்னர் குலங்களை கௌரவம் செய்த ராமன்

83. விபிஷணார்ப்பித ரங்கக ராம்
विभीषणार्पित रङ्गक राम् ॥८३॥
விபீஷணனுக்கு ரங்க விக்ரஹம் தந்த ராமன்

84. கீச குலாநுக்ரஹகர ராம்
कीश कुलानुग्रह कर राम् ॥८४॥
ஸூர்ய வம்சத்திற்குப் பெருமை தந்த ராமன்

85. ஸகல ஜீவ ஸம்ரக்ஷக ராம்
सकल जीव संरक्षक राम् ॥८५॥
எல்லா உயிர்களையும் நன்கு காத்த ராமன்

86. ஸம்ஸ்த லோக ஆதாரக ராம்
समस्त लोकाधारक राम् ॥८६॥
எல்லா உலகிற்கும் ஆதாரம் ராமன்

7. உத்தர காண்டம்
॥ उत्तर काण्डम् ॥

87. ஆகத முனி கண ஸம்ஸ்துத ராம்
आगत मुनि गण संस्तुत राम् ॥८७॥
வந்திருந்த முனிவர் கூட்டங்களால் துதிக்கப்பட்ட ராமன்

88. விச்ருத தச கண்டோத்பவ ராம்
विश्रुत दश कण्ठोद्भव राम् ॥८८॥
தசரதனின் உற்பத்தியை கேட்டறிந்த ராமன்

89. ஸீதா ஆலிங்கன நிர்வ்ருத ராம்
सीतालिङ्गन निर्वृत राम् ॥८९॥
ஸீதையின் அணைப்பில் சந்தோஷித்த ராமன்

90. நீதி ஸுரக்ஷித ஜந பத ராம்
नीति सुरक्षित जन पद राम् ॥९०॥
நீதியின் வழியில் ஜனங்களை நடத்தியவன்

91. விபிந த்யாஜித ஜநக ஜ ராம்
विपिन त्याजित जनक ज राम् ॥९१॥
ஜனக புத்ரியை வனத்தில் த்யாகம் செய்த ராமன்

92. காரித லவணாஸுர வத ராம்
कारित लवणासुर वध राम् ॥९२॥
லவணாஸுர வதத்தை நிச்சயித்த ராமன்

93. ஸ்வர்க்கத சம்புக ஸம்ஸ்துத ராம்
स्वर्गत शम्बुक संस्तुत राम् ॥९३॥
ஸ்வர்க்கம் சென்ற ஶம்புகனால் நன்கு துதிக்கப்பட்ட ராமன்

94. ஸ்வ தநய குச லவ நந்தித ராம்
स्व तनय कुश लव नन्दित राम् ॥९४॥
சொந்தக் குழந்தைகள் குஶன், லவனை மகிழ்வித்த ராமன்

95. அச்வமேத க்ரது தீக்ஷித ராம்
अश्वमेध क्रतु दीक्षित राम् ॥९५॥
அஶ்வமேத யாக விரதம் கொண்ட ராமன்

96. காலா வேதித ஸுரபத ராம்
काला वेदित सुरपद राम् ॥९६॥
ஸ்வர்க்கம் செல்ல வேண்டிய நேரமானதை காலனிடமிருந்து அறிந்த ராமன்

97. ஆயோத்யக ஜந முக்தித ராம்
आयोध्यक जन मुक्तिद राम् ॥९७॥
அயோத்யா ஜனங்களுக்கு முக்தியளித்த ராமன்

98. விதி முக விபுதாநந்தக ராம்
विधि मुख विबुधानन्दक राम् ॥९८॥
ப்ரஹ்மா முதலான தேவர்கள் முகத்தில் சந்தோஷம் தந்த ராமன்

99. தேஜோமய நிஜரூபக ராம்
तेजोमय निज रूपक राम् ॥९९॥
ஒளிமயமான நிஜரூபம் உடைய ராமன்

100. ஸம்ஸ்ருதி பந்த விமோசக ராம்
संसृति बन्ध विमोचक राम् ॥१००॥
சம்சார பந்தங்களிலிருந்து விடுதலை தரும் ராமன்

101. தர்ம ஸ்தாபந தத்பர ராம்
धर्म स्थापन तत्पर राम् ॥१०१॥
தர்மத்தை நிலைக்கச்செய்வதையே விரும்பிய ராமன்

102. பக்தி பராயண முக்தி த ராம்
भक्ति परायण मुक्ति द राम् ॥१०२॥
பக்தியோடு துதிப்பவருக்கு முக்தி தரும் ராமன்

103. ஸர்வ சராசர பாலக ராம்
सर्व चराचर पालक राम् ॥१०३॥
எல்லா உலகங்களையும் காக்கும் ராமன்

104. ஸர்வ பவாமய வாரக ராம்
सर्व भवामय वारक राम् ॥१०४॥
எல்லா உயிர்களையும் துக்கங்களிலிருந்து விடுவிக்கும் ராமன்

105. வைகுண்டாலய ஸம்ஸ்துத ராம்
वैकुण्ठालय संस्थित राम् ॥१०५॥
வைகுண்டத்தில் நிலைத்த ராமன்

106. நித்யாநந்த பத ஸ்தித ராம்
नित्यानन्द पद स्थित राम् ॥१०६॥
நித்ய ஆனந்த நிலையில் இருக்கும் ராமன்

107. ராம ராம ஜய ராஜா ராம்
राम् राम् जय राजा राम् ॥१०७॥
ஜயராமனுக்கே வெற்றி

108. ராம ராம ஜய ஸீதா ராம்.
राम् राम् जय सीता राम् ॥१०८॥
ஸீதாராமனுக்கே வெற்றி

Tuesday, October 24, 2017

அடியேனின் கந்த புராண சொற்பொழிவு

கந்த புராண சொற்பொழிவு
கம்பரசன்பேட்டை J சீதாராம ஶர்மா
இடம்: வரஸித்தி வினாயகர் ஆலயம், ரயில்வே காலனி, கிழக்குத் தாம்பரம்
நாள்: 22 அக்டோபர் 2017, ஞாயிறு

இது என்னோட மூனாவது சொற்பொழிவு.  மொதல்ல கிழக்குத் தாம்பரம் ஏரிக்கரைத் தெருவில் வீற்றிருக்கும் ஸ்ரீ கங்கையம்மன் கோவில்ல, ரெண்டாவது இதே பிள்ளையார் கோவில்ல, ரெண்டுமே இந்த வருஷத்து நவராத்ரியின் போது, அம்பாளை பத்தி.

மூன்று பாகங்களாக கீழே கொடுத்திருக்கும் யூ ட்யூப் லிங்க்ல  பதிவேற்றியிருக்கிறேன்.  ஆஸ்தீக, நாஸ்தீக நண்பர்கள், இருந்தா நல்லாயிருக்கும் இருக்கற எல்லா டீமும் கேக்கறா மாதிரி தான் முடிஞ்ச வரைக்கும் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.   முழுவதும் கேட்டு விட்டு, வழக்கம் போல குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டுங்கள்.  உபயோகமாக இருக்கும்னா இன்னும் கொஞ்சம் பேருக்குப் பகிருங்கள்.  ரெண்டு மணி நேரத்துல சொன்னதால கொஞ்சம் கதை, கொஞ்சம் செய்யுள், கொஞ்சம் தத்வம்னு வேகமா போயிருக்கேன்.  பொறுத்துக் கொள்ளவும்.   நீங்க குழந்தைகளுக்கு மெல்ல சொல்லிக் குடுங்கோ.

https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf7mlSOgAEmquNVsLtBQ2fnX

Friday, August 18, 2017

Valmiki Ramayanam Tamil Audio - முழு வால்மீகி ராமாயணம் ஆடியோ புக்

சம்போ மஹாதேவ !

முழு வால்மீகி ராமாயணம் ஆடியோ

அனுக்ரஹ க்ரந்தமான இந்த வால்மீகி ராமாயணம் தமிழ்-ஸம்ஸ்க்ருத மொழிகளில் பெரும் புலமை பெற்ற என் தாத்தாவைப் போன்ற சிறந்த வித்வான்களிடமிருந்து க்ரஹித்தது. இது கேட்பவர்க்கும், படிப்பவர்க்கும் எல்லா இக, பர சௌபாக்யங்களையும் அளிக்கிறது என்பது என் அனுபவம்.


யூ டியூப்பில்  பதிவு செய்திருக்கிறேன். கேட்டுப் பயன் பெறுங்கள்.  

இது மூல க்ரந்தமான வால்மீகி ராமாயணத்தின் செம்மையான தமிழ்ப் பதிவு.   உங்களுக்குத் தெரிந்த கம்ப, துளசி ராமாயணங்களோடு ஒப்பிடுங்கள். 

கருத்துக்களைக் கூறுங்கள். லிங்க் ல் ஏதாவது பிரச்னை, கிடைக்கவில்லை என்றால் தெரிவியுங்கள்.

ஜய் ஸ்ரீ ராம்

https://www.youtube.com/playlist?list=PLKsNUmN3Ozf43uJEswb4MU7ibO4tmQNFW

உங்கள் ஆசிகளுடன் 
சீதாராமன். ஜ