Monday, January 11, 2010

விஷ்ணு புராணம் - 31

02_09. இந்த த்ருவ ஸ்தானம் எப்படி எல்லாவற்றிற்கும் ஆதாரமாயிருக்கிறது என்று கூறுகிறார் பராசரர். மேலுலகின் நக்ஷத்ர கூட்டம் உடும்பு போன்ற சிம்சுமாரம் என்ற ப்ராணியின் உருவத்தை ஒத்திருக்கிறது. வலமாகச் சூழ்ந்துள்ள அதன் வால் பாகத்திலேயே த்ருவன் இருக்கிறான். இதற்கே சிம்சுமார சக்ரமென்றும் பெயர். த்ருவன் தானும் சுற்றி, மற்றவர்களையும் தன்னைச் சுற்றும்படி செய்கிறான். சந்த்ர, ஸூர்ய, நக்ஷத்ரங்கள் அவனிடம் காற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. நாராயணன் இந்த ப்ராணியின் ஹ்ருதய ஸ்தானத்தில் இருக்கிறார். நாராயணம் த்ருவனுக்கும், த்ருவன் ஸூர்யனுக்கும், அவன் இந்த உலகிற்கும் ஆதாரம். எட்டு மாதங்கள் நீரை உறிஞ்சி, மீண்டும் அதை சுவையுடன் மழையாகப் பொழிகிறான் ஸூர்யன்.

ஸூர்யன் கிரணங்களால் ஜலத்தை உறிஞ்சி, சந்த்ரனிடம் பொழிகிறான். சந்த்ரன் வாயு நாடிகளால் புகை, நெருப்பு, காற்று இவைகளின் கூட்டமாகிற மேகத்தில் பொழிகிறான். இதற்கு முந்தைய மேகங்களிலிருந்து தண்ணீர் வழிவதில்லை. அவை அப்ரங்கள் எனப்படுகின்றன. ஆறு, ஸமுத்ரம், பூமி, உயிர்கள் என நான்கு இடங்களிலிருந்து க்ரஹிக்கப்படும் நீரை சுவை மிகுந்ததாக்கி மேகங்கள் மீண்டும் பொழிகின்றன. இவ்வாறன்றி ஸூர்யன் இருக்கும் போதே பெய்யும் மழைநீர் ஆகாச கங்கையிடமிருந்து ஸூர்யன் உறுஞ்சியது. அது புண்ய தீர்த்தம். கங்கா ஸ்னானம், திவ்ய ஸ்னானம் இதில் நனைவது. இவர்கள் ஒரு போதும் நரகம் செல்வதில்லையாம்.

அச்வினி, க்ருத்திகை முதலான ஒற்றைப்படை நக்ஷத்ரங்கள் விஷம நக்ஷத்ரங்களாகும். பரணி, ரோஹிணீ முதலிய இரட்டைப்படை நக்ஷத்ரங்கள் ஸம நக்ஷத்ரங்களாகும். விஷம நக்ஷத்ரங்களுடன் ஸூர்யன் இருக்கும் போது பொழியும் மழை நீர் திக்கஜங்களால் கங்கையிலிருந்து உறிஞ்சி விடப்பட்டது. இன்னொன்று ஸூர்யனாலேயே எடுத்து விடப்பட்டது. மழைநீரே உயிர்கள் வாழ ஓஷதிகளை வளர்க்கிறது. எனவே அது அம்ருதம். இவைகளை முறையே மழைநீர், மேகம், ஸூர்யன், த்ருவன், சிம்சுமார சக்ரம் என்று ஆராய்ந்தால் இங்கும் ஆதாரமாயிருப்பது நாராயணனே.

No comments:

Post a Comment