Monday, January 11, 2010

விஷ்ணு புராணம் - 32

02_10. ஸூர்யன் சுற்றும் தக்ஷிணாயன, உத்தராயணங்களின் நடுவிலுள்ள ஆகாசத்தின் அளவு நூற்றெண்பத்து மூன்று க்ராந்தி வ்ருத்தங்களாகும். இவைகளில் ஏறியும், இறங்கியும் செல்ல ஸூர்யனுக்கு முன்னூற்றறுபத்தாறு கதிகளாகின்றன. இதுவே ஒரு வருஷம். ஸூர்யன் ரதத்தில் ஆதித்யர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்ஸுக்கள், யக்ஷர்கள், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள் ஆகியோர் இருக்கின்றனர். தாதா என்னும் ஸூர்யன், க்ருதஸ்தலை என்னும் அப்ஸரஸ், புலஸ்த்ய ரிஷி, வாஸுகி என்ற ஸர்ப்பம், ரதக்ப்ருத் என்ற யக்ஷன், ஹேதி என்ற ராக்ஷஸன், தும்புரு என்ற கந்தர்வன் இவர்கள் சித்திரை மாதத்தில் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். வைகாசியில் அர்யமா (ஸூர்யன்), புஞ்ஜிகஸ்தலா(அப்ஸரஸ்), புலஹர் (ரிஷி), கச்சவீரன்(ஸர்ப்பம்), ரதௌஜஸ்(யக்ஷன்), ப்ரஹேதி(ராக்ஷஸன்), நாரதன்(கந்தர்வன்) ஆகியோர் அதிகாரிகள்.

ஆனியில் மித்ரன்(ஸூர்யன்), மேனகா(அப்ஸரஸ்), அத்ரி(ரிஷி), தக்ஷன்(ஸர்ப்பம்), ரதஸ்வனன்(யக்ஷன்), பௌருஷேயன்(ராக்ஷஸன்), ஹாஹா(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். ஆடியில் வருணன்(ஸூர்யன்),ஸஹஜன்யா(அப்ஸரஸ்), வஸிஷ்டர்(ரிஷி), நாகம்(ஸர்ப்பம்), சித்ரன்(யக்ஷன்), ரதன்(ராக்ஷஸன்), ஹூஹூ(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். ஆவணியில் இந்த்ரன்(ஸூர்யன்), ப்ரம்லோசை(அப்ஸரஸ்), அங்கிரஸ்(ரிஷி), ஏலாபுத்ரன்(ஸர்ப்பம்), ஸ்ரோதஸ்(யக்ஷன்), ஸர்ப்பி(ராக்ஷஸன்), விச்வாவஸு(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். புரட்டாசியில் விவஸ்வான்(ஸூர்யன்), அனும்லோசா(அப்ஸரஸ்), ப்ருகு(ரிஷி), சங்கபாலன்(ஸர்ப்பம்), ஆபூரணன்(யக்ஷன்), வ்யாக்ரன்(ராக்ஷஸன்), உக்ரஸேனன்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.

ஐப்பசியில் பூஷா(ஸூர்யன்), க்ருதாசீ(அப்ஸரஸ்), கௌதமர்(ரிஷி), தனஞ்ஜயன்(ஸர்ப்பம்), ஸுஷேணன்(யக்ஷன்), வாதன்(ராக்ஷஸன்), வஸுருசி(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். கார்த்திகையில் பர்ஜன்யன்(ஸூர்யன்), விச்வாசீ(அப்ஸரஸ்), பரத்வாஜர்(ரிஷி), ஐராவதம்(ஸர்ப்பம்), ஸேனஜித்(யக்ஷன்), ஆபன்(ராக்ஷஸன்), விச்வாவஸு(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.
மார்கழியில் அம்சன்(ஸூர்யன்), உர்வசீ(அப்ஸரஸ்), காச்யபர்(ரிஷி), மஹாபத்மன்(ஸர்ப்பம்), தார்க்ஷ்யன்(யக்ஷன்), வித்யுத்(ராக்ஷஸன்), சித்ரஸேனன்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.


தையில் பகன்(ஸூர்யன்), பூர்வசித்தி(அப்ஸரஸ்), க்ரது(ரிஷி), கார்க்கோடகன்(ஸர்ப்பம்), அரிஷ்டனேமி(யக்ஷன்), ஸ்பூர்ஜன்(ராக்ஷஸன்), ஊர்ணாயுஸ்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். மாசியில் த்வஷ்டா(ஸூர்யன்), திலோத்தமை(அப்ஸரஸ்), ஜமதக்னி(ரிஷி), கம்பனன்(ஸர்ப்பம்), ரிதஜித்(யக்ஷன்), ப்ரஹ்மோபேதன்(ராக்ஷஸன்), த்ருதராஷ்ட்ரன்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள். பங்குனியில் விஷ்ணு(ஸூர்யன்), ரம்பை(அப்ஸரஸ்), விச்வாமித்ரர்(ரிஷி), அச்வதரன்(ஸர்ப்பம்), ஸத்யஜித்(யக்ஷன்), யக்ஞோபேதன்(ராக்ஷஸன்), ஸூர்யவர்ச்சஸ்(கந்தர்வன்) ஆகியோர் ரதத்தைச் செலுத்தும் அதிகாரிகள்.

மஹரிஷிகள் துதிக்க, கந்தர்வன் பாட, அப்ஸரஸ் ஆட, ராக்ஷஸர்கள் பின்பற்ற, ஸர்ப்பங்கள் தேரை நிலைப்படுத்த, யக்ஷர் கடிவாளம் முதலானவைகளைப் பிடிக்க, வாலகில்யர்கள் உபாஸிக்க ஸூர்யன் துதிகளாலும், கொண்டாட்டங்களாலும் மகிழ்ந்து மிகுந்த தேஜஸ்ஸுடன் ப்ரயாணிக்கிறான்.

1 comment:

  1. Hi
    Good work. It looks like stopped in the middle.Why?
    Please follow my blogs for 50 articles on Hindu Culture.
    swamiindology.blogspt.com
    tamilandvedas.wordpress.com

    ReplyDelete