Monday, February 8, 2010

விஷ்ணு புராணம் - 77

04_21. இந்த பரீக்ஷித்துக்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என நான்கு குழந்தைகள் பிறக்கப் போகின்றனர். ஜனமேஜயனுக்கு சதாநீகன் என்பவன் பிறந்து, யாக்ஞவல்க்யரிடமிருந்து வேதங்களையும், க்ருபாச்சார்யாரிடமிருந்து அஸ்த்ர வித்தைகளையும் கற்று, சிற்றின்பங்களை முற்றிலும் ஒழித்து சௌனகர் உபதேசத்தால் ஆத்ம ஞானமடைந்து மோக்ஷத்தையும் பெறப்போகிறான். இவனுக்கு அச்வமேத தத்தனும், அவனுக்கு அதிஸீமக்ருஷ்ணனும், அவனுக்கு நிசக்துவும் பிறப்பான். இவன் காலத்தில் கங்கையால் ஹஸ்தினாபுரம் அழியும். அதன் பின் இவன் கௌசாம்பி நகரில் வஸிப்பான்.

இவனுக்கு உஷ்ணனும், அவனுக்கு விசித்ரரதனும், அவனுக்கு சரசிரதனும், அவனுக்கு வ்ருஷ்ணியும், அவனுக்கு ஸுஷேணனும், அவனுக்கு ஸுநீதனும், அவனுக்கு ந்ருபசக்ஷுஸ்ஸும், அவனுக்கு ஸுகிபலனும், அவனுக்குப் பாரிப்லவனும், அவனுக்கு ஸுநயனனும், அவனுக்கு மேதாவியும், அவனுக்கு ரிபுஞ்ஜயனும், அவனுக்கு அர்வனும், அவனுக்குத் திக்மனும், அவனுக்கு ப்ருஹத்ரதனும், அவனுக்கு வஸுதாஸனும், அவனுக்கு சதாநீகனும், அவனுக்கு உதயனனும், அவனுக்கு விஹீநரனும், அவனுக்கு தண்டபாணியும், அவனுக்கு நிமித்தனும், அவனுக்கு க்ஷேமகனும் பிறக்கப் போகிறார்கள். இவனோடு தேவர்களும், ரிஷிகளும் பூஜித்த, ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கு மூலாதாரமான பாண்டவ வம்சம் முடியப் போகிறது இந்தக் கலி யுகத்தில்.

No comments:

Post a Comment